Latest Updates
-
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
கைக்குத்தல் அரிசி இட்லி
நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. எதை சாப்பிட நினைத்தாலும், அதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். முக்கியமாக இத்தகையவர்கள், அரிசியை உணவில் அதிகம் சேர்க்கவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் கைக்குத்தல் அரிசியால் ஆன இட்லி, மிகவும் சிறந்த ஒரு காலை உணவாகும்.
இந்த கைக்குத்தல் அரிசி இட்லி சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த கைக்குத்தல் அரிசி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கைக்குத்தல் அரிசி - 2 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
அவில் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 7-8 கப்
செய்முறை:
முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் அவிலை தனித்தனியாக நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒவ்வொன்றையும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை கழுவி வடிகட்டி விட்டு தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
முதலில் அரிசியை கிரைண்டரில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பை மற்றும் அவிலை தனியாக நன்கு நைஸாக அரைத்து விட்டு, மூன்றையும் ஒன்றாக மீண்டும் கிரைண்டரில் போட்டு, 10 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு அதனை 4 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைத்துக் கொண்டு, உப்பு போட்டு கிளறி, இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான கைக்குத்தல் அரிசி இட்லி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications