Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
கைக்குத்தல் அரிசி இட்லி
நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. எதை சாப்பிட நினைத்தாலும், அதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். முக்கியமாக இத்தகையவர்கள், அரிசியை உணவில் அதிகம் சேர்க்கவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் கைக்குத்தல் அரிசியால் ஆன இட்லி, மிகவும் சிறந்த ஒரு காலை உணவாகும்.
இந்த கைக்குத்தல் அரிசி இட்லி சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த கைக்குத்தல் அரிசி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கைக்குத்தல் அரிசி - 2 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
அவில் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 7-8 கப்
செய்முறை:
முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் அவிலை தனித்தனியாக நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒவ்வொன்றையும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை கழுவி வடிகட்டி விட்டு தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
முதலில் அரிசியை கிரைண்டரில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பை மற்றும் அவிலை தனியாக நன்கு நைஸாக அரைத்து விட்டு, மூன்றையும் ஒன்றாக மீண்டும் கிரைண்டரில் போட்டு, 10 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு அதனை 4 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைத்துக் கொண்டு, உப்பு போட்டு கிளறி, இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான கைக்குத்தல் அரிசி இட்லி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











