இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்

Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவராக புகழ் பெற்றவர் சாணக்கியர். பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்று அவர் சிறந்த வாழ்க்கை பயிற்சியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மதம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் சாணக்கியர் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். இன்றும் மக்கள் அவருடைய கருத்துக்கள் வாழ்க்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவிகரமானதாக உள்ளது.

Chanakya Niti Essential Qualities of a Wise Person

மௌரியப் பேரரசுக் காலத்தில் அவர் எழுதிய 'அர்த்தசாஸ்திரம்' எனும் நூல், இந்திய அரசியல் அறிவியலின் ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. சாணக்கியரின் போதனைகளில், ஒரு அறிவார்ந்த நபர் கொண்டிருக்க வேண்டிய பண்புகளுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். இந்த பதிவில் சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு அறிவார்ந்த நபருக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

வயதில் மூத்தவர்களை மதிப்பது

சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, வயதில் மூத்தவர்கள் மற்றும் அனுபவசாலிகளின் வார்த்தைகளை மதித்து நடப்பவரே அறிவார்ந்தவர் ஆவார். பெரியோர்களிடம் அதிக அனுபவமும், அறிவும் இருப்பதை உணர்ந்து, அவர்களிடமிருந்து மதிப்புமிக்க வழிகாட்டுதலைப் பெற முடியும் என்பதை அறிவார்ந்தவர்களும், புத்திசாலிகளும் நன்கு அறிவார்கள். அவர்கள் பெரியோர்களைக் குறை கூறுவதோ அல்லது அவர்களைத் தாழ்வாகக் கருதுவதோ இல்லை. அதற்குப் பதிலாக, அவர்களின் ஆசிகளையும் அறிவுரைகளையும் நாடுகிறார்கள். வயது முதிர்வால் கிடைக்கும் அனுபவம் மற்றும் ஞானத்தை மதிப்பதன் முக்கியத்துவத்தை அறிவார்ந்தவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

சரியான முடிவெடுத்தல்

சாணக்கிய நீதியில் தங்கள் இலக்குகளை நோக்கிச் செயல்படுவதற்கும், உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் துணிச்சல் கொண்டவரே அறிவார்ந்த நபர் என்று சாணக்கியர் கருதினார். அத்தகைய குணமுள்ளவர்கள் தயங்குவதோ அல்லது தங்கள் பணிகளைத் தள்ளிப்போடுவதோ இல்லை. மாறாக, அவர்கள் விரைவாகவும் உறுதியாகவும் செயல்படுகிறார்கள். தங்கள் செயல்களின் விளைவுகள் என்னவென்பதைப் பற்றி ஆழமான புரிதல் உள்ளவர்கள், வெற்றியை நோக்கிய சரியானப் பாதையையே தேர்ந்தெடுக்கிறார்கள். குறுகிய கால லாபங்களையோ அல்லது இழப்புகளையோ கண்டு அவர்கள் கவனம் சிதறுவதில்லை. மாறாக, தங்கள் நீண்ட கால இலக்குகளிள் மட்டுமே அவர்கள் முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள்.

குழுவாக செயல்படுதல்

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குழுப்பணியின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தியுள்ளார். ஒரு பொதுவான இலக்கை அடைவதற்காக மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்வதின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்பவரே அறிவார்ந்தவர் என்று சாணக்கியர் கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளன என்பதையும், அவர்கள் தங்கள் தனித்துவமான வழியில் குழுவிற்குப் பங்களிக்க முடியும் என்பதையும் அறிவார்ந்தவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் வேலைகளையும், பொறுப்புகளையும் மற்றவர்களிடம் ஒப்படைக்கத் தயங்குவதில்லை. அத்துடன், அவர்கள் தங்கள் கடமைகளைத் திறம்படச் செய்வார்கள் என்று முழுமையாக நம்புகிறார்கள்.

பகுத்தறியும் திறன்

ஒரு அறிவார்ந்தவர் வலுவான பகுத்தறியும் திறனைக் கொண்டிருப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் எந்தவொரு சூழ்நிலையையும் நடுநிலையாகப் பகுப்பாய்வு செய்து, உண்மைகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் பகுத்தறிவுடன் முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். அவர்கள் தங்கள் உணர்வுகள் தங்கள் பகுத்தறியும் திறனை மறைக்க அனுமதிக்காமல், தர்க்கம் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் கூர்மையான அறிவைக் கொண்டிருப்பார்கள் மற்றும் சவால்களுக்கோ அல்லது சிக்கலான பிரச்சனைகளுக்கோ ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.

Story first published: Monday, July 20, 2026, 15:25 [IST]
Desktop Bottom Promotion