Latest Updates
-
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க..
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா?
நம் உலகம் ஒவ்வொரு நாளும் பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மையாகும். உலகில் பல நாடுகள் காலநிலை மாற்றங்களால் கடுமையான அழிவுகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நேபாளத்தில் நடந்த பெருவெள்ளம் கூட இதுமாதிரியான ஒரு நிகழ்வுதான். ஆனால் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால் இதுபோன்ற நிகழ்வுகள் இதோடு நின்றுவிடப் போவதில்லை.

காலநிலை மாற்றத்தால் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். 2050-ஆம் ஆண்டிற்குள் உலகின் பல நகரங்கள் மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவிலான கடும் வெப்பத்தைச் சந்திக்க நேரிடலாம். இதனால், குளிர்விக்கும் வசதிகள் இன்றி மக்கள் வாழ்வதே சவாலானதாக மாறிவிடும். அதேவேளையில், இமயமலைப் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இது கங்கை, யமுனை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய ஆறுகளைப் பாதிக்கக்கூடும். இந்த நிலை தொடர்ந்தால், பல உயிரினங்கள் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. மேலும் காற்று மாசு, காடுகளின் அழிப்பு மற்றும் இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துதல் போன்ற மனித நடவடிக்கைகளால் பூமி கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
இமயமலையின் பனிப்பாறைகள் உருகுகின்றன
உலகளாவிய வெப்பநிலை உயர்வு காரணமாக இமயமலைப் பனிப்பாறைகள் வழக்கத்தை விட வேகமாக உருகி வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால், 2050-ஆம் ஆண்டிற்குள் முக்கிய ஆறுகளில் நீர்வரத்து குறையக்கூடும். அத்துடன் உலகின் பல பகுதிகளில் அதிகரிக்கும் கடும் வெப்பம் உயிருக்கே ஆபத்தானதாக மாறக்கூடும்.
2050 ஆண்டிற்குள் வெப்பம் பெரிய ஆபத்தாக மாறும்
2050-ஆம் ஆண்டிற்குள், பல நகரங்கள் ஆபத்தான அளவிலான அதிக வெப்பநிலையைச் சந்திக்கக்கூடும். தற்போது நாம் அனுபவிக்கும் இயற்கையின் பாதுகாப்பு எதிர்காலத்தில் நிச்சயம் இருக்காது. சரியான பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் வேலை செய்வது அல்லது தங்கியிருப்பது லட்சக்கணக்கான மக்களுக்குக் கடினமானதாகவும், ஏன் உயிருக்கே கூட ஆபத்தானதாகவும் மாறக்கூடும்.
இந்திய ஆறுகளின் எதிர்காலம்
இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் கடந்த காலங்களை விட மிக வேகமாக உருகி வருகின்றன. இது ஆரம்பத்தில் ஆறுகளில் நீர் ஓட்டத்தை அதிகரித்தாலும், வரும் காலங்களில் கங்கை, யமுனை மற்றும் சிந்து போன்ற முக்கிய ஆறுகளில் நீர்வரத்து வெகுவாகக் குறைவதற்கு வழிவகுக்கும். இதனால் எதிர்காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகலாம்.
2050-க்குப் பிறகு ஆறுகள் வறண்டு போகத் தொடங்கலாம்
2050-ஆம் ஆண்டளவில் பனிப்பாறைகள் உருகிய பிறகு நீர்மட்டம் உச்சத்தை எட்டிய பிறகு, ஆறுகளில் பாயும் நீரின் அளவு வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குடிநீர், விவசாயம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்குத் தீவிரமான தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்களின் வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படும். அதிகரிக்கும் வெப்பம், உருகும் பனிப்பாறைகள் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவை பல தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிந்துபோகக் காரணமாக அமையலாம். லட்சக்கணக்கான மக்கள் உணவு, நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.



Click it and Unblock the Notifications
