Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
1/2 கப் உளுந்து இருந்தா.. ஈவ்னிங் சுடசுட இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 10 நாள் வரை கூட வெச்சு சாப்பிடலாம்...
Ulunthu Murukku Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் 1/2 கப் உளுத்தம் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு ஒரு சூப்பரான முறுக்கு செய்து கொடுங்கள்.
இந்த உளுந்து முறுக்கு 10 நாட்கள் வரை நன்கு மொறுமொறுவென்று இருக்கும். முக்கியமாக இந்த முறுக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த முறுக்கை ஒருமுறை செய்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அந்த அளவில் இந்த முறுக்கு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு உளுந்து முறுக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* அரிசி மாவு - 4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் -1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் 1/2 கப் உளுத்தம் பருப்பை எடுத்து, அதை நீரில்
3-4 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து, 3 கப் நீரை ஊற்றி, குக்கரை
அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை குளிர வைக்க
வேண்டும்.
* பருப்பு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்து, அத்துடன் அரிசி மாவு,
உப்பு, ஓமம், மிளகாய் தூள் சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு நன்கு
மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் முறுக்கு உழக்கை எடுத்து, அதில் விருப்பமான முறுக்கு அச்சை
வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நிரப்ப வேண்டும்.
* பின்பு அதை முறுக்குகளாக ஒரு துணியில் பிழிந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளைப்
போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான உளுந்து முறுக்கு
தயார்.



Click it and Unblock the Notifications







