Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
புளி சட்னி
புளி சட்னியை செய்து சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்காது. சொல்லப்போனால் புளி சட்னி பற்றி இப்போது தான் கேட்டிருப்பீர்கள். இந்த புளி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
நீங்கள் சட்னி பிரியரா? இட்லி, தோசைக்கு சட்னி சாப்பிட பிடிக்குமா? இதுவரை நீங்கள் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புளி சட்னியை செய்து சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்காது. சொல்லப்போனால் புளி சட்னி பற்றி இப்போது தான் கேட்டிருப்பீர்கள். இந்த புளி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னியை பயணம் மேற்கொள்ளும் போது எடுத்து செல்ல ஏற்றது. இது 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

உங்களுக்கு புளி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கடுகு - 1 டீஸ்பூன்
* புளி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக் வேண்டும்.
* பின்னர் அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* தேங்காய் பொன்னிறமானதும், அதில் வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான புளி சட்னி தயார்.
குறிப்பு:
* பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதிகமாக புளி சேர்க்க வேண்டாம்.
* தேங்காயை அளவுக்கு அதிகமாக வறுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் சுவை மாறிவிடும்.
* தாளிக்கும் போது நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இன்னும் நல்ல ப்ளேவர் கிடைக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











