Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
ஜல்ஜீரா: கோடைக்கால பானம்
கோடையில் வட இந்தியாவில் கிடைக்கும் மிகவும் பிரபலமான ஒரு பானம் தான் ஜல்ஜீரா. இது ஹோலி பண்டிகை அன்றும் வட இந்தியாவில் செய்யப்படும். இந்த பானம் உடலை குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும். மேலும் இதன் சுவையானது பானி பூரிக்கு தரப்படும் பானி போன்றே இருக்கும்.
சரி, இப்போது அந்த ஜல்ஜீரா பானத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
குளிர்ந்த தண்ணீர் - 3 1/2 கப்
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 1/4 கப்
இஞ்சி - 1 துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
புளி - 1 டேபிள் ஸ்பூன்
காரா பூந்தி - சிறிது
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மாங்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் புளியை சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் மசாலா பொடிகள் மற்றும் எலுமிச்சை சாற்றினைத் தவிர அனைத்தையும் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டியில் போட்டு, குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மசாலா பொருட்களை அனைத்தையும் போட்டு, அத்துடன் சர்ச்சரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால், ஜல்ஜீரா பானம் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











