Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
சிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
சூப் உடலுக்கு மிகவும் நல்லது. இதுவரை எத்தனையோ சூப் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடிப்பது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இந்த கீரையைக் கொண்டு சூப் செய்து குடித்தால், உடலினுள் நீரினால் ஏற்பட்ட வீக்கமானது குறையும்.
எனவே இந்த கீரை கிடைத்தால், தவறாமல் அதனைக் கொண்டு சூப் செய்து குடியுங்கள். சரி, இப்போது அந்த மூக்கிரட்டை கீரை சூப் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
நீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
Image Courtesy: soupstodesserts



Click it and Unblock the Notifications











