Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது இந்த 2 பொருட்களை சேர்த்து செஞ்சா தெய்வீக சுவையோட இருக்குமாம்...!
Sakkarai Pongal Recipe in Tamil: தமிழர் பண்டிகையான பொங்கல் வந்துவிட்டது. அனைவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் தைப்பொங்கலை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். பொங்கல் அன்று அனைவரின் வீட்டிலும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் இரண்டும் வைத்து கடவுளை வழிபடுவார்கள்.
சர்க்கரைப் பொங்கல் வைக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக தமிழர் பார்மபரியத்தில் உள்ளது. பொங்கல் நாளன்று தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலை அனைத்து இல்லதரிசிகளும் செய்வார்கள்.

சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கமாக இருந்தாலும் அதில் சில புதிய பொருட்களை சேர்ப்பது நீங்கள் வைக்கும் பொங்கலின் சுவையை பலமடங்கு அதிகரிக்கும். இந்த தைப்பொங்கலில் வைக்கும் சர்க்கரைப் பொங்கல் கூடுதல் சுவையுடன் இருக்க என்ன செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பச்சரிசி - 1 கப்
- பாசிப்பருப்பு - 3 ஸ்பூன்
- வெல்லம் - ஒன்றரை கப்
- நெய் - ¼ கப் (உங்கள் விருப்பத்திற்கே ஏற்ப)
- ஏலக்காய் - 2
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
- பால் - 4 ஸ்பூன்
- சமையல் கற்பூரம் - ஒரு சிட்டிகை
- கிராம்பு - 1
- ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை
- உப்பு - ஒரு சிட்டிகை (விருப்பத்திற்கு ஏற்றது)
- முந்திரி- 10
- திராட்சை - 15
செய்முறை:
- முதலில் ஒரு பானையில் அல்லது குக்கரில் ¼ டீஸ்பூன் நெய்
சேர்த்து, பாசிப்பருப்பை வறுக்கவும்.
- அரிசியை நன்கு கழுவி, அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு
சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைக்கவும் அல்லது 4 விசில் விடவும்.
அரிசி நன்றாக வெந்ததும் மசித்து வைத்துக் கொள்ளவும்.
- அரிசி வேகும் நேரத்தில், வெல்லத்தை உடைத்து, தண்ணீரில் மூழ்கும் வரை
சூடாக்கி, கொதிக்க வைக்கவும். வெல்லம் முழுவதுமாகக் கரையட்டும்.
- பின்னர் அதை வடிகட்டி, குக்கரில் மசித்த அரிசியுடன்
சேர்க்கவும்.
- ஒரு கடாயில், ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி பருப்பை
பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு, திராட்சையை வறுக்கவும்.
இரண்டையும் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும.
- அதே வாணலியில், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து விட்டு அடுப்பை
அணைக்கவும். ஜாதிக்காய் பொடியைச் சேர்த்து, விரைவாகக் கிளறவும்.
- வறுத்த ஏலக்காய், கிராம்பு, உண்ணக்கூடிய கற்பூரம் மற்றும்
ஜாதிக்காய் பொடியை பொங்கலுடன் சேர்க்கவும்.
- ஏலக்காயை வறுக்காமல் பச்சையாகவும் பொங்கலில் சேர்க்கலாம்.
- அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலந்து, பால் சேர்த்து மிதமான
தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும். சமைக்கும் போது தண்ணீர் பற்றவிலை
என்றால் ¼ கப் தண்ணீர் அல்லது கூடுதல் பால் சேர்க்கலாம்.
- இறுதியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்த முந்திரி மற்றும்
திராட்சையைச் சேர்க்கவும்.
- இப்போது தெய்வீகமான சர்க்கரைப் பொங்கல் ரெடி. இந்த சர்க்கரை பொங்கல்
வழக்கமான சர்க்கரைப் பொங்கல் போல அல்லாமல் கூடுதல் சுவையுடன்
இருக்கும்.



Click it and Unblock the Notifications











