Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
பாம்பே ஸ்டைல் பட்டாணி குருமா மசாலா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Pattani Masala Recipe in Tamil: பட்டாணி அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான பொருளாகும். பட்டாணி சுவையான பொருள் என்பதையும் தாண்டி அதில் புரோட்டின் அதிகமிருப்பதால் ஆரோக்கியமான பொருளாகவும் இருக்கிறது. வீட்டில் சப்பாத்தி செய்ய முடிவெடுத்துவிட்டால் அதற்கான முதல் சைடிஷாக அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பட்டாணிக் குருமாதான்.
வழக்கமான பட்டாணி குருமா போல அல்லாமல் இந்த பதிவில் வித்தியாசமான மற்றும் வேற லெவல் சுவையில் இருக்கும் பட்டாணிக் குருமாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டாணி மசாலா வடநாட்டு ஸ்டைலில் செய்யக்கூடியது மற்றும் வித்தியாசமான சுவையுடையது. இந்த பட்டாணி மசாலா ஹோட்டல்களில் பரிமாறப்படுவதை விட அருமையான சுவையில் இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் பட்டாணி
- 2 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 3 நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- ¼ ஸ்பூன் சீரகம்
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மல்லித்தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் நறுக்கியது
- ¼ டீஸ்பூன் சர்க்கரை
- 1 ஸ்பூன் வெண்ணெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 இலவங்கப்பட்டை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
செய்முறை:
- முதலில் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு பாத்திரத்தில் சில துளிகள் எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
- பின்னர் இதை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் 1 ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, முதலில் இஞ்சி, பூண்டு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதங்கியவுடன் ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்த வெங்காய தக்காளியைச் சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
- மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- பச்சைப் பட்டாணி மற்றும் போதுமான தண்ணீர் சேர்க்கவும்.
- இறுதியாக தேவையான அளவு உப்பு மற்றும் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குக்கரை மூடவும்.
- மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அதில் அரைத்து வைத்து சீரகப்பொடியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறுதியாக வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் சூப்பரான பட்டாணி மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications











