Just In
- 2 hrs ago Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- 8 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- 10 hrs ago உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
- 11 hrs ago பெண்களின் இடுப்பின் அளவு அவர்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமாம்... ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு...!
Don't Miss
- News ராமநாதபுரத்தில் சிக்கல்.. மதுரை எய்ம்ஸ் மாணவர்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டமா? இயக்குனர் விளக்கம்
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
செட்டிநாடு மட்டன் குழம்பு
மட்டன் குழம்புகளிலேயே செட்டிநாடு மட்டன் குழம்பு மிகவும் சுவையானது. இந்த குழம்பை பார்த்தாலே அனைவருக்கும் பசி எடுக்கும். மேலும் இதன் மணத்திற்கு ஈடு வேறு எதிலும் இருக்காது. இத்தகைய செட்டிநாடு மட்டன் குழம்பை பலர் வீட்டில் முயற்சி செய்திருப்பார்கள். இருப்பினும் உண்மையான செட்டிநாடு மட்டன் குழம்பின் சுவை கிடைக்காமல் இருக்கும்.
ஆகவே உண்மையான செட்டிநாடு மட்டன் குழம்பின் சுவை வேண்டுமானால், கீழே குறிப்பிட்டுள்ளது போன்று முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் அருமையாக இருக்கும். சரி, அந்த செட்டிநாடு மட்டன் குழம்பில் ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மட்டன்
-
1/2
கிலோ
பட்டை
-
1
கிராம்பு
-
2
ஏலக்காய்
-
2
அன்னாசிப்பூ
-
1
வெங்காயம்
-
2
(நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்ழுன்
தக்காளி
-
2
(நறுக்கியது)
தேங்காய்
பால்
-
1
கப்
உப்பு
-
தேவையான
அளவு
தண்ணீர்
-
1
கப்
கொத்தமல்லி
-
2
டேபிள்
ஸ்பூன்
(நறுக்கியது)
எண்ணெய்
-
3
டேபிள்
ஸ்பூன்
மசாலாவிற்கு...
பட்டை
-
1
கிராம்பு
-
2
ஏலக்காய்
-
2
சீரகம்
-
1
டீஸ்பூன்
சோம்பு
-
1
டீஸ்பூன்
வரமிளகாய்
-
5
மல்லி
-
2
டீஸ்பூன்
தேங்காய்
-
3
டேபிள்
ஸ்பூன்
(துருவியது)
முந்திரி
-
5
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அது காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு 3-4 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
பின்பு அது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், சற்று கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ மற்றும் வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட்டு, ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், அதனைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது நன்கு கொதித்தும், உப்பு சுவை பார்த்து, உப்பு போதாமல் இருந்தால், அதில் இன்னும் சிறிது உப்பு சேர்த்து கிளறி ஒரு கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி!!!