இட்லி, தோசைக்கு எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. கத்திரிக்காய் வெச்சு புதுவிதமா சட்னி செய்யுங்க.. அள்ளும்..

Posted By:

Brinjal Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி தான் செய்வீர்களா? அப்படி ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சட்னி செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு சட்னி செய்யுங்கள். இப்படி சட்னி செய்யும் போது வீட்டில் இருப்பவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கத்திரிக்காய் சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இதை ஒருமுறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் இந்த கத்திரிக்காய் சட்னி ருசியாக இருக்கும்.

Kathirikkai Chutney How To Make a Tasty Brinjal Chutney Recipe

உங்களுக்கு கத்திரிக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 6
* கத்திரிக்காய் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் வரமிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, கத்திரிக்காய் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, August 1, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion