காலையில இட்லி தோசைக்கு பதிலா.. ஒருமுறை இந்த அடை தோசையை ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..

Posted By:

Instant Adai Dosa Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா?அப்படியானால் இன்று காலை சத்தான மற்றும் சுவையான அடை தோசையை சுடுங்கள். இந்த அடை தோசைக்கு பருப்புகளை ஊற வைத்து அரைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

மாறாக, இதை வீட்டில் உள்ள கடலை மாவு மற்றும் ரவையுடன் சேர்த்து செய்யலம். அதுவும் இந்த அடை தோசையை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அட்டசாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.

Instant Adai Dosa How To Make A Instant Adai Dosai Recipe

உங்களுக்கு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எள்ளு விதைகள் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

* ரவை - 1 கப்
* கடலை மாவு - 1 கப்
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியமு)
* ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, கடலை மாவு, தயிர், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகளின்றி கலந்து 20 நிமிடம் மூடி வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு துருவிய கேரட், ஸ்வீட் கார்ன், முருங்கைக்கீரை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி, தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்கு கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிது எள்ளு விதைகளை சேர்த்து பொரிந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி பரப்பி, மூடி வைத்து 4-5 நிமிடம் வேக வைத்து, பின் மூடியைத் திறந்து, தோசையைத் திருப்பிப் போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான அடை தோசை தயார். இதேப் போன்று ஒவ்வொரு முறை அடை தோசையை விடும் போதும், எள்ளு விதைகளை சேர்த்து சுடுங்கள். இதனால் அடை தோசை இன்னும் சுவையாக இருக்கும்.

Image Courtesy: Happy's Cook

[ of 5 - Users]
Story first published: Wednesday, March 13, 2024, 7:06 [IST]
Desktop Bottom Promotion