இருமல், சளியை சரிச்செய்யும் நண்டு சூப்.. மழைக்கு இதமாக இருக்கும்.. சண்டே ட்ரை பண்ணுங்கள்..!

Posted By:

மழைக்காலம் தற்போது தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் சூப் செய்துக் கொடுத்தால் நல்லது. காரணம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதினால் நோய் தொற்றுகள் அதிகமாக பரவும்.. அதில் குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அவதிப்படுவார்கள்..

அதனால் தினமும் ஒரு சூப் செய்துக் கொடுக்கலாம். அதில் சளியை முறிக்கும் இந்த நண்டு சூபை மழைக்காலம் முடியும் வரை வாரம் ஒருமுறையாவது செய்துக் கொடுங்கள்.. நண்டு குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. வாங்க இந்த நண்டு சூப்பை வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம்..

how to make crab soup Nandu soup monsoon here is the recipe

தேவையான பொருள்கள்

1. நண்டு

2. தக்காளி

3. பெரிய வெங்காயம்

4. இஞ்சி

5. மிளகு

6. சீரகம்

7. எண்ணெய்

8. பூண்டு

9. பச்சைமிளகாய்

10. பட்டை

11. பிரியாணி இலை

12. கொத்தமல்லி இலை

13. உப்பு

செய்முறை

1. முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.

2. நண்டின் சதைப்பகுதி வெளியில் வருமாறு தட்டிக் கொள்ளவும்.

3. உடன் இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.

4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரியாணி இலை, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

5. நன்றாக வதங்கியவுடன் அரிசி கழுவிய தண்ணீர் அல்லது தண்ணீர் போதுமான அளவு ஊற்றவும்.

6. தண்ணீர் கொதித்ததும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு போடவும்.

7. நண்டு நன்கு வெந்ததும் இப்பொழுது மிளகு, சீரகத்தூள் போடவும்.

8. நண்டு ஓடு அடியில் இருக்கும் அதனால் வடிகட்டி விட்டு கொத்தமல்லி இலை தூவி சுடச் சுட பறிமாறவும்.

9. இதோ சுவையான நண்டு சூப் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, July 20, 2024, 17:03 [IST]
Desktop Bottom Promotion