எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..

Posted By:

Fire Roasted Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியாக தான் சட்னியை செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான ருசியைக் கொண்ட சட்னியை செய்யுங்கள். அதாவது சட்னிக்கு உரிய வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நெருப்பில் சுட்டு, அதன் பின் சட்னி செய்யுங்கள். இப்படி சுட்டு சட்னியை செய்யும் போது, அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தீயில் சுட்ட சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தீயில் சுட்ட சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Fire Roasted Chutney How To Make a Fire Roasted Chutney Recipe

தேவையான பொருட்கள்:

* பெரிய தக்காளி - 1
* வெங்காயம் - 2
* முழு பூண்டு - 1
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு....

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் அடுப்பில் சப்பாத்தி சுடும் க்ரில் ஸ்டேண்ட்டை வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வைத்து, திருப்பி திருப்பி வைத்து நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அவற்றை நன்கு குளிர வைத்து, அவற்றின் தோலை நீக்கிவிட்டு, நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த காய்கறிகளை ஒன்றிரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் சுட்ட வெங்காயம், தக்காளி, பூண்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை ஊற்றி, சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து, 2 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான தீயில் சுட்ட சட்னி தயார்.

Image Courtesy: Apoorvaa's Nalabagam

[ of 5 - Users]
Story first published: Friday, April 19, 2024, 8:30 [IST]
Desktop Bottom Promotion