Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு
தமிழ்நாட்டில் ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு மிகவும் பிரபலமானது. தண்ணி குழம்பு பார்ப்பதற்கு ரசம் போன்று இருக்கும். இதை சூப்பாகவும் அருந்தலாம் அல்லது இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
தமிழ்நாட்டில் ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு மிகவும் பிரபலமானது. தண்ணி குழம்பு பார்ப்பதற்கு ரசம் போன்று இருக்கும். இதை சூப்பாகவும் அருந்தலாம் அல்லது இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். உங்களுக்கு சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை வீட்டில் செய்ய வேண்டுமென்று தோன்றினால், இன்று ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்கள். இது நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டை வாங்கித் தரும்.

உங்களுக்கு ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சிக்கன் - 250 கிராம்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
மசாலா பவுடருக்கு...
* வரமிளகாய் - 6-8
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* அரிசி - 1 டீஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
மசாலா அரைப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* மசாலா பவுடர்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், சீரகம், மிளகு, அரிசி, சோம்பு மற்றும் மல்லி விதைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் சிக்கனை சேர்த்து உப்பு தூவி, சிக்கனானது தானாக நீர் விட்டு வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
* நீர் முற்றிலும் வற்றியதும், அதில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பில் இருந்து எண்ணெய் நன்கு பிரிந்து வரும் போது, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











