Latest Updates
-
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
பூரி, சப்பாத்திக்கு சுண்டல் வைச்சு இப்படி ஒரு குழம்பு செய்யுங்க... இனிமே ஹோட்டல் பக்கமே போக மாட்டிங்க...!
Chana Masala Recipe in Tamil: பூரி பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவு. ஹோட்டல் போகும் போது சிலர் விரும்பி வாங்கி சாப்பிட ஒரு உணவும் பூரி தான். சும்மா புஸ்ஸுன்னு இருக்க பூரியை எடுத்து நச்சுனு அமுக்கி அதுக்கு நடுவுல பூரி மசாலா கிழங்க வச்சு மேல இன்னொரு பூரியை அமுக்கி கொடுப்பாங்க பாருங்க. இன்னும் அந்த சுவை நுனி நாக்குல இருக்குன்னு சொல்றவங்க ஏராளம்.
இப்போ மக்கள் ஆரோக்கிய கண்ணோட்டத்துல இருக்கறதால பூரியை ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனாலும் வீட்ல எப்போவாவது செய்து சாப்பிடுவாங்க. அப்படி நீங்களும் எப்போவாவது பூரி செஞ்சா, பூரி கிழங்குக்கு பதிலா இந்த குழம்ப செஞ்சு பாருங்க!

தேவையான பொருட்கள்:
அரைக்க:
- பெரிய வெங்காயம் - 1
- பட்டை - 1 துண்டு (சிறியது)
- ஏலக்காய் - 3
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- கிராம்பு - 4
- சீரகம் - 1
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - 1
தாளிக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1 துண்டு (சிறியது)
- ஜாதிபத்ரி - 1
- கல்பாசி - சிறிதளவு
- சோம்பு - ¼ டீ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- சுண்டல் - ஒரு கப்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- சுண்டலை குறைந்தது 6 மணி நேரமாவது ஊற வைத்து எடுத்து
கொள்ளுங்கள்.
- பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
- தக்காளியை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை
வதக்கவும்.
- அதனுடன் பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பு சேர்த்து நன்றாக
வதக்கவும்.
- அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கடைசியாக தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை கிளறவும்.
- பின் அடுப்பை அணைத்து அறை வெப்பநிலைக்கு வரும் வரை ஆற விடவும்.
- பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து காயவிட்டு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கல்பாசி, சோம்பு, மற்றும் ஜாதிபத்ரி
சேர்த்து பொரிய விடவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக
வதக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு
தண்ணீர் சேர்க்கவும்.
- அதில் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மற்றும் மஞ்சள் தூள்
சேர்க்கவும்.
- ஊற வைத்த சுண்டலை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து கொள்ளவும்.
- அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி நான்கு அல்லது
ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
- பிரஷர் அடங்கியதும் எடுத்து கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை
சேர்த்தால் சுவையான சன்னா மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications











