Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இட்லி, தோசைக்கு பதில் இந்த செட்டிநாடு அடை தோசையை செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் அசந்து போயிருவாங்க...!
Chettinad Adai Dosa Recipe in Tamil: தினசரி இட்லி தோசை என்றாகிவிட்ட நம் காலகட்டத்தில் தோசையை சலிக்காமல் சாப்பிடுபவர்களும் உண்டு. இன்றைக்கும் தோசையா என சலித்து கொள்பவர்களும் உண்டு. சிலர் சிறுதானியத்தில் இட்லி தோசை செய்து சுவையை மாற்றி குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால் நம் சிறுவயதில் அம்மா செய்து தந்த போது சாப்பிட்ட அடை தோசையை மறந்துவிடுகிறார்கள்.
என்ன தான் நாம் வீட்டில் சமைத்தாலும் கடைகளில் கிடைக்கும் உணவுகளை விரும்புவோம். அதிலும் செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு தனி இடம் தான். நாம் இங்கு எப்படி செட்டிநாட்டு அடை செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
அரைக்க:
- பச்சரிசி - ½ கப்
- புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி - ½ கப்
- துவரம்பருப்பு - ½ கப்
- கடலைப்பருப்பு - ½ கப்
- பாசிப்பருப்பு - ½ கப்
- உளுந்தம் பருப்பு - ½ கப்
- வரமிளகாய் - 6-7
- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- தேங்காய் - ½ மூடி
அரைத்த பின் சேர்க்க:
- சின்ன வெங்காயம் - 15-20
- பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரை கப் பச்சரிசி மற்றும் அரை கப் புழுங்கல்
அரிசி சேர்க்கவும்.
- புழுங்கல் அரிசிக்கு பதில் நீங்கள் வீட்டில் சாதம் செய்யும்
அரிசியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
- அதனுடன் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மற்றும்
உளுந்தம் பருப்பு சேர்த்து கொள்ளவும்.
- அதில் தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 முறை நன்றாக அலசி சுத்தம் செய்து
கொள்ளவும்.
- பின் அதில் ஊற வைக்க தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து 2 முதல் 3 மணி
நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து நறுக்கி
கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் சேர்த்து
கொள்ளலாம்.
- பின் தேங்காயை நறுக்கியோ அல்லது துருவியோ எடுத்து கொள்ளவும்.
- ஊற வைத்த தண்ணீரை வடிகட்டிவிட்டு தேங்காய் சேர்த்து தோசை மாவு
பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- அதனுடன் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 மணி
நேரத்திற்கு புளிக்க விடவும்.
- புளிக்க வைக்காமல் நேரடியாகவும் பயன்படுத்தலாம்.
- மாவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும்
வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- உங்களுக்கு வேண்டுமானால் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து கலந்து
கொள்ளலாம்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை ஊற்றி எண்ணெய்
சேர்த்து வேகவிடவும்.
- ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான
செட்டிநாட்டு தோசை தோசை தயார்.



Click it and Unblock the Notifications





