Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
காளான் வாங்குனா இந்த மாதிரி ஆம்பூர் ஸ்டைல் பிரியாணி செய்யுங்க... இனிமே ஹோட்டல் பக்கமே போக மாட்டிங்க...!
Ambur Style Mushroom Biryani Recipe in Tamil: பிரியாணியையும், நம்மையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். மொகலாயர்களின் கண்டுபிடிப்பான இந்த பிரியாணி இப்போது நமது உணவின் அடையாளமாகவே மாறிவிட்டது. பிரியாணி என்றாலே அது மட்டன் அல்லது சிக்கன் பிரியாணிதான். ஆனால் புரட்டாசி வரப்போவதால் பெரும்பாலான மக்கள் ஒரு மாதத்திற்கு அசைவ உணவு பக்கம் செல்ல முடியாது.
அசைவம் சாப்பிட முடியாத சூழலில் அனைவர்க்கும் கைகொடுப்பது காளான்தான். பிரியாணியில் திண்டுக்கல் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, தலசேரி பிரியாணி, முகலாய பிரியாணி என பல வகைகள் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு பிரியாணி என்றால் அது ஆம்பூர் பிரியாணி.

ஆம்பூர் பிரியாணி செய்வதற்கு மிகவும் எளிமையான மற்றும் சுவையான பிரியாணியாகும். அதனால்தான் இந்த பிரியாணி மிகவும் பிரபலமானதாக உள்ளது. புரட்டாசி மாதத்தில் ஆம்பூர் ஸ்டைலில் காளான் பிரியாணி செய்து சாப்பிடுவது அசைவ உணவு இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கும். இந்த பதிவில் காளானை வைத்து சுவையான ஆம்பூர் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சீரக சம்பா அரிசி
- 1 கப் காளான்
- 6 வர மிளகாய்
- 1/4 கப் தயிர்
- உப்பு - தேவையான அளவு
- 3 ஸ்பூன் நெய்
- 2 பெரிய வெங்காயம்
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- 2 தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பச்சை மிளகாய்
- 2 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 4 கிராம்பு
- 2 பிரியாணி இலை
- 2ஏலக்காய்
- 2 இலவங்கப்பட்டை
செய்முறை:
- முதலில் சீரக சம்பா அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- வர மிளகாயை சூடான நீரில் 20 நிமிடங்கள் அல்லது மிளகாய் மென்மையாக மாறும் வரை ஊற வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கர் அல்லது பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் ஏலக்காய், பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் தக்காளியைச் சேர்க்கவும், அது மென்மையாக மாறும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.
- காளான் பாதி வெந்ததும் தயிர் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் கழுவி வைத்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அரிசியை நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் குக்கரை மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 1 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
- பின்னர் குக்கரை தம் போட்டு 10 நிமிடம் காத்திருக்கவும்.
- 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து இறுதியாக நெய் சேர்த்து நன்கு கிளறினால் சூடான, சுவையான ஆம்பூர் காளான் பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications











