Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
இனிமேல் உங்கள் குழந்தையை பிறப்பதற்கு முன்னரே நீங்கள் பார்க்க முடியும். இதன் மூலமாக...
வி.ஆர் எனும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் மூலமாக நீங்கள் இனிமேல் பிரசவ காலத்தின் போதே உங்கள் செல்ல குழந்தையை காண முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சி என்பது மக்களுக்கு நல்லது, கெட்டது என இரு வகையிலும் பலனை அளித்து வருகிறது. ஆதி காலம் முதல் ஒரு பெண் கருத்தரித்தால் அவள் என்ன குழந்தையை ஈன்றேடுக்கிறார் என்பதை பத்து மாதம் பொறுத்திருந்து தான் பார்த்தனர்.
ஸ்கேனிங் என்ற தொழில்நுட்பம் வந்த பிறகு பிரசவ காலத்தின் போதே ஆணா, பெண்ணை கண்டறிந்து கூறினர். இதன் காரணமாக பெண் சிசுக் கொலைகள் தான் அதிகரித்தன.
இப்போது இதையும் தாண்டி, கருவில் சிசு வளரும் போதே அவரை நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலமாக ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். அவரது அனுபவம் இங்கு காணலாம்...

வி.ஆர்!
விர்சுவல் ரியாலிட்டி என்பதன் சுருக்கமே வி.ஆர்., இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும், காண முடியாததையும் காண்பிக்க முடியும்.

ஆச்சரியம் அளிக்கும் அனுபவம்!
4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் காண்பது வாழ்நாள் பாக்கியம் என்றே கூறலாம். இது ஒரு ஐடியாவாக பிறந்து, அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர்.

தோழியிடம் உதவி!
பெரும்பாலும் 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை கண்ட சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியும். இதற்காக இந்த தொழில்நுட்பம் தெரிந்த தோழியிடம் உதவி நாடியுள்ளார் அந்த தாய்.

எப்படி என்றே தெரியாமல் ஆரம்பத்த கனவு...
உலகிலேயே இதுதான் முதல் முறை இப்படி ஒரு சம்பவம் நடப்பது. ஆவா மெடிக்கல் செண்டரிடம் உதவி நாடினர். யோசனை நன்றாக இருக்கவே அவர்கள் இதை செயல்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள் இதற்காக 4అ அல்ட்ராசவுண்ட் சிச்டமை உருவாக்கினர். மேலும், எப்படி கோப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அந்த கர்ப்பிணிக்கு ஆலோசனை வழங்கினர்.

ஒரு வியாழனில்....
ஒரு வியாழன் தினத்தில் 4D அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் செய்ய அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். முதலில் 3D மாடலில் டிஸைன் செய்யப்பட்ட கருவில் வளரும் குழந்தையை வி.ஆர் கண்ணாடி மூலம் அந்த பெண்மணி கண்டார்.
Image Courtesy

வியப்பளித்த நிகழ்வு!
மாடலிங் செய்த உரு என்றாலும், தனக்கு பிறக்க போகும் குழந்தையை முன்னரே பார்ப்பது என்பது ஓர் அரிய நிகழ்வு தானே. சிசு காற்றில் மிதப்பது போன்ற காட்சிகளை அவர் கண்டார். அதுவும், அவருக்கு மிகவும் அருகாமையில்.
Image Courtesy

இசை கோர்வை!
கர்ப்பிணி பெண்ணுக்கு அந்த உணர்வு ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக இசை கோர்வை எல்லாம் செய்யப்பட்டிருந்தது. இதில் முக்கியமாக ஸ்கேனிங் 32 வாரத்திற்கு முன்னரே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

எதிர்காலம்!
எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழும் நிகழ்வுகளும் நடக்கலாம். எதுவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.



Click it and Unblock the Notifications