Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
தாய்மார்களே! குழந்தை பிறந்த பிறகு உங்களையும் குழந்தையையும் ஆரோக்கியமா வைத்திருக்க இத ஃபாலோ பண்ணுங்க!
Postpartum Diet In Tamil: குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாய்மார்களும் சத்தான மற்றும் சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கர்ப்பத்திற்குப் பிந்தைய மீட்சியை விரைவுபடுத்துவதற்கான மிக அடிப்படையான வழியாகும். மேலும், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் மற்றும் பிரசவம் ஆகிய இரண்டும் முக்கியமான நிகழ்வுகளாகும். கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொள்வது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்ப விளைவை ஏற்படுத்தும். ஆனால் பிரசவத்திற்குப் பிந்தைய ஊட்டச்சத்து மீட்புக்கு சமமான முக்கியமான படியாகும்.

பிரசவத்திற்குப் பிறகு சரியான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது நீண்ட காலத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில், பெண்களின் ஆற்றல் அளவுகள் குறைவாக இருக்கும், வளர்சிதை மாற்றம் மந்தமாக இருக்கும், ஹார்மோன்களில் திடீர் வீழ்ச்சி மற்றும் பல உடலியல் மாற்றங்கள் நிகழலாம். இதை எதிர்த்துப் போராட, பிரசவத்திற்குப் பின் சரியான உணவு எடுத்துக்கொள்வது முக்கியம்.
சரியான ஊட்டச்சத்து மற்றும் சரிவிகித உணவு ஆகியவை புதிதாகப் பிறந்த குழந்தையின் தாய்ப்பால் மற்றும் வளர்ச்சியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரசவத்திற்குப் பின் தாய்மார்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதால் பெறும் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவுக் குறிப்புகள்
- போதுமான நீரேற்றம் ஆற்றலைத் தக்கவைப்பதற்கான முக்கியமான படியாகும்.
- முக்கிய ஊட்டச்சத்துக்கள் (கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு) விகிதாசார உட்கொள்ளல் கலோரி தேவைகளை பூர்த்தி செய்யும்.
- நார்ச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய பழங்கள் மற்றும் காய்கறிகளின் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இது செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
- ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கவும் தூக்கக் கலக்கத்தைத் தவிர்க்கவும் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
- தேவையற்ற எடை அதிகரிப்பைத் தவிர்க்க காலியான கலோரிகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்.
பிரசவத்திற்குப் பின் ஆரோக்கியமான உணவின் நன்மைகள்
பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் சரியான உணவை உட்கொள்வது தாய்க்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் மிக முக்கியம். தாய் தனது உடல் மற்றும் மனதை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அவள் சரியாக சாப்பிடுவது, குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
தாய்ப்பால் உற்பத்தியை ஆதரிக்கிறது
பூண்டு, பால் சார்ந்த பானங்கள், காய்கறிகள் மற்றும் சில இலைக் காய்கறிகள் போன்ற உணவுகளில் கேலடோகோஜ்கள் என்ற சிறப்பு வகை ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை, தாய்ப்பாலின் உற்பத்தியை மேம்படுத்த உதவும். மேலும், இது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உற்பத்தி செய்ய உதவும்.
ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்கிறது
பிரசவத்திற்குப் பிந்தைய கால கட்டத்தில் தாய்மார்களுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது. 500-600 கிலோகலோரி தேவைப்படும். எனவே, பிரசவத்திற்குப் பிறகான ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவு, தாயின் இந்த அதிகரித்த ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
மீட்பை விரைவுபடுத்துகிறது
கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் நிச்சயமாக தாய்மார்கள் விரைவில் குணமடைய உதவும்.
மகப்பேற்றுக்கு பின் நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வது, பிரசவத்திற்குப் பிறகு தாய்க்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க உதவுகிறது. இது சிறந்த செரிமானத்திற்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
ஆரோக்கியமான எடையை திரும்ப உதவுகிறது
பெரும்பாலும் பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது. சமச்சீரான உணவு, கூடுதல் ஆற்றல் தேவைகளை ஆதரிக்கவும், அதிகரித்த ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும். தாய் பாலூட்டும் காலத்திற்குள் ஆரோக்கியமான உடல் நிறை குறியீட்டிற்கு திரும்புவதற்கு உதவும் சமச்சீர் ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானது. கர்ப்பத்திற்குப் பிறகு ஆரோக்கியமான எடை இழப்பு இருப்பதையும் இது உறுதி செய்கிறது.
சகிப்புத்தன்மை நிலைகளை மேம்படுத்துகிறது
பிரசவத்திற்குப் பிந்தைய காலம் புதிய தாய்மார்களுக்கு மிகவும் சவாலானது. அவர் தன்னை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் பிறந்த குழந்தையின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சரியான ஊட்டச்சத்து இல்லாமல், சகிப்புத்தன்மை நிலைகள் பராமரிக்கப்படாது.
உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது
பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவானவை. இதில் இரத்த சோகை, மலச்சிக்கல், சிறுநீர் தொற்று, இரத்தக்கசிவு, காயம் ஏற்பட்ட இடத்தில் தொற்று, பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன அழுத்தம் போன்ற பல உள்ளன. சரியான ஊட்டச்சத்து இந்த சிக்கல்களைச் சமாளிக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications

