Just In
- 53 min ago Today Rasi Palan 22 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திக்க போறாங்க... உஷார்..
- 6 hrs ago மார்ச் மாதம் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்..ஜாலியா இருங்க!
- 7 hrs ago உங்ககிட்ட இந்த பழக்கத்தில் ஒன்னு இருந்தாலும் உங்க முகத்தில சுருக்கங்கள் வந்து உங்கள வயசானவங்களா காட்டுமாம்...!
- 9 hrs ago பின்லாந்து மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ஏழாவது ஆண்டாக முதலிடம்... அப்படி என்ன இருக்கு இந்த நாட்டுல?
Don't Miss
- Automobiles எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த கார்களை யாருமே மறக்க மாட்டாங்க! இந்தியர்களின் மனம் கவர்ந்த மாடல்களின் தொகுப்பு
- News "கருவறுப்போம்!" சர்ச்சை வீடியோ- நாமக்கல் கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றம்! புது வேட்பாளர் யார்
- Sports கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் இந்தியாவுடன் விளையாடிய டெஸ்ட்!ஒரே நேரத்தில் 2 டெஸ்ட் ஆடிய இங்கிலாந்து
- Movies Inmel song: வெளியானது ஸ்ருதிஹாசன் -லோகேஷின் இனிமேல் டீசர்.. மெயின் பாடல் எப்போ தெரியுமா?
- Finance மார்ச் 31 நெருங்கியது.. வருமான வரி சேமிக்க கடைசி நிமிட டிப்ஸ்..!
- Technology நீ Flipkart இல்லை மோசடிகார்ட்.. கழுவி ஊத்திய நபர்.. ஆர்டர் செஞ்சா ஒழுங்கா பொருளை கொடு.. இல்ல ரீபண்ட் கொடு..
- Travel கோடைக் காலத்தில தென்னிந்தியாவின் இந்த இடங்களுக்கு போக மறக்காதீங்க – ஜில்லுன்னு இருக்குமாம் மக்களே!
- Education சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு திடீர் ஒத்திவைப்பு
தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
சர்வதேச அளவில் ஐந்து வயது குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன. ஆகவே அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது
மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம் ஆகும். தாய்ப்பால் புகட்டுவதால் அழகு குறையும் என்ற கருத்தில் பலரும் இப்பொழுதெல்லாம் தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கின்றனர். ஆனாலும் சர்வதேச அளவில் ஐந்து வயது குழந்தைகளில் ஒரு கோடி குழந்தைகள் வரையில் தாய்ப்பால் புகட்டப்படாமல், ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன. ஆகவே அனைவரும் தாய்ப்பாலின் நலன்களை அறிந்து, அதை பற்றிய விழிப்புணர்வு பெறுதல் அவசியமாகிறது.
பச்சிளம் குழந்தைக்கு தாய் பால் புகட்டுவதே சிறந்தது. அதற்கு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் காரணம் அல்ல, தாய்ப்பால் புகட்டுவதில் தாய்க்கும் நன்மை உண்டு. ஆறு மாதம் வரையில் குழந்தைக்கு தேவையான வைட்டமின் மற்றும் சத்துகளோடு, குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் தாய்பாலிலேயே அதிகம் இருக்கிறது.
ஆகவே இப்போது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எவ்வளவு நல்லது என்று பார்ப்போம்.
சந்தோஷத்தைக் கொடுக்கும்
தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது.
பழைய நிலையை அடைய உதவும்
கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக் காலத்தில் கருப்பையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பேற்றிற்கு பின் கருப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய தாய்ப்பால் உதவுகிறது.
இரத்த இழப்பை சரிசெய்யும்
தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
மாதவிடாயை தாமதப்படுத்தும்
தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. அதாவது பெண்களின் கருப்பையில் அண்டம் உருவாவதை தாமதிக்கிறது.
உளவியல் ரீதியான பிணைப்பு
தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும்.
சுயமரியாதை அதிகமாகும்
தாய்ப்பால் கொடுப்பதால், அது தாயிடத்தில் சுய மரியாதையை ஊக்குவிக்கிறது.
எளிமையான வேலை
தாய்ப்பால் புகட்டுவதால் உணவு வழங்கும் உபகரணங்களை கழுவி, சுத்தப்படுத்தி, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எளிய உணவு
தாய்ப்பால் மிகவும் சிக்கனமானதும் கூட. எப்படியெனில் செயற்கையாக ஆரோக்கிய உணவுகள் புகட்ட முற்படுதல் அதிக செலவை ஏற்படுத்தும். மேலும் அது சராசரி குடும்ப செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவு பிடிக்கும்.
புற்றுநோயை தடுக்கும்
தாய்ப்பால் புகட்டுவது மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.
எடை குறைய உதவும்
தாய்ப்பால் குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்கள் உடலில் எடை இழக்கவும் உதவுகிறது.