Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
நீங்கள் செய்யும் இந்த தவறு உங்கள் குழந்தையை பாலியல் குழப்பத்திற்கு ஆளாக்கும் என தெரியுமா?
இங்கே பெற்றோர்கள் செய்யும் சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை என்பது போல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நாம் தெரியாமல் செய்யும் சிறுசிறு தவறுகள் கூட நாளை பெரிய விளைவுகளை உண்டாக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

பாலியல் குழப்பங்கள்
ஒரு வயது குழந்தையை கூட இப்போது பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். வளர்இளம் பருவத்திலேயே குழந்தைகள் பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுவது, பாலியல் படங்களை பார்ப்பது என குழந்தை பருவத்திலேயே இது போன்ற பாலியல் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். பெற்றோர்கள் செய்யும் விஷயங்களை அப்படியே செய்வது, இது பற்றி தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஆகியவை இந்த வயதின் இயல்பு.

பெற்றோர்கள் செய்யும் தவறுகள்
பெற்றோர்கள் குழந்தை தானே என்ன தெரியப்போகிறது என குழந்தையின் முன்பு உடை மாற்றுவது, இந்த வயதிலேயே உடல்களை பற்றி தெரிந்து கொண்டால் அவர்களின் எண்ணத்தில் வித்தியாசம் தெரியாது என்று நினைக்கும் தாய்மார்களும் இருக்கிறார்கள்.

குழந்தையின் முன்பு வேண்டாம்
ஆண் பெண் என யாராக இருந்தாலும் குழந்தைகளின் முன்பு உடை மாற்றுவதை தவிர்க வேண்டும். மேலை நாட்டு கலாச்சாரங்கள் நமது நாட்டிற்கு ஒத்துவராது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நாம் குழந்தைகள் தானே என்று அவர்கள் முன்பு உடை மாற்றும் போது அவர்களது மனதில் ஒரு அதிர்ச்சி உண்டாகும். ஆனால் அதை வெளியில் காட்ட தெரியாது. இது அவர்கள் பாலியல் குழப்பம் அடைய பாதைவகுக்கிறது.

முகம் சுழிக்கும் உடைகளும் வேண்டாம்
வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியில் போகும் போதும் சரி முகம் சுழிக்கும் அளவிற்கு உடைகளை அணியாதீர்கள். மற்றவர்கள் மனதை உறுத்தும் விதமான ஆடைகளை அணிவது குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும்.

முன்னுதாரணமாக இருங்கள்
குழந்தைகள் பெரும்பான்மையான விஷயங்களை தங்களை சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நாமே தவறாக நடந்து கொண்டால், அவர்களால் எப்படி நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகள் முன்பு நேர்மை, கண்ணியம், உதவி செய்யும் மனப்பான்மையுடன் இருங்கள். அவர்களும் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள்.



Click it and Unblock the Notifications