Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
கருவிலேயே உங்கள் குழந்தை புத்திசாலியா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்!!
உங்கள் கருவில் இருக்கும் குழந்தையை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். உங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் இஞ்ச் பை இஞ்ச்சாகக் கவனித்துக் கொண்டிருக்கும் ஒரே நபர் கருவிலிருக்கும் உங்கள் குழந்தை தான். உங்களுடைய நல்ல மற்றும் கெட்ட குணங்கள் அனைத்தையும் அது தனக்குள்ளும் கிரகித்துக் கொண்டிருக்கும்.
கருவில் இருக்கும் போதே குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து ஐ.க்யூ. என்னும் புத்திசாலித் திறனை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, உங்கள் நடவடிக்கைகளை எப்போதும் பாஸிட்டிவ்வாகவே வைத்துக் கொள்ளுங்கள்; உங்கள் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தையும் அதிபுத்திசாலியாகப் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கருவிலேயே உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர்வதற்கான சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

அதிக ஃபோலேட் உணவுகள்
ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகளை நீங்கள் சாப்பிடுவதால், கருவில் உள்ள குழந்தையின் புத்திசாலித்தனம் மளமளவென்று வளர்கிறதாம். தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலேட் உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம். குழந்தை பிறப்பில் ஏற்படும் சில குறைபாடுகளைக் களைவதற்கும் இது மிகவும் உதவுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
கருவில் உள்ள குழந்தையின் புத்திசாலித்தனத்தை அதிகப்படுத்துவதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, டிஎச்ஏ (DHA) என்ற ஒருவகை ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தில் இதற்கான பவர் அதிகம் உள்ளதாம்.

கருவை வருட வேண்டும்
கரு இருக்கும் வயிற்றுப் பகுதியை நீங்கள் அடிக்கடி லேசாக அழுத்தித் தடவிக் கொடுக்க வேண்டும். இதனால் கருவுக்குள் செல்லும் இரத்த ஓட்டம் சீராக அதிகரிக்கும்.

குழந்தையோடு பேசுங்கள்
கருவில் இருக்கும் உங்கள் குழந்தையோடு நீங்கள் தினமும் பேச வேண்டும். கரு உருவான 15 வாரங்களில் குழந்தைக்குக் கேட்கும் திறன் வந்து விடுமாம். தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் உங்கள் குழந்தையோடு சத்தமாகப் பேசினால், அது கேட்டு தனக்குள் கிரகித்துக் கொள்ளுமாம்.

அதிகம் இசை கேளுங்கள்
குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இசை ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. நல்ல இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குக் கற்றல் திறன் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

மன அழுத்தத்தைக் குறையுங்கள்
உங்களுக்கு ஏதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் அதை உடனே தூக்கி எறிந்து விடுங்கள். அதை நீங்கள் தக்க வைத்துக் கொண்டு எப்போதுமே சோகமாக இருந்தால், அது உங்கள் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை மோசமாகப் பாதிக்க வாய்ப்புள்ளது.

நோ ஸ்மோக்கிங்
நீங்கள் கருவைச் சுமந்து கொண்டிருக்கும் போது, கண்டிப்பாக புகைப்பிடிக்கக் கூடாது. கருவில் உள்ள குழந்தையின் மூளையையும் ஐ.க்யூ. திறனையும் உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கடுமையாகப் பாதிக்கும்.



Click it and Unblock the Notifications











