Just In
- 49 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
30 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கான சில சிம்பிளான வழிகள்!!!
இன்றைய காலத்தில் திருமணமானவுடன் குழந்தைப் பெற்றுக் கொள்வதை விட, வாழ்க்கையில் செட்டில் ஆனப் பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் தம்பதிகள் தான் அதிகம். ஆனால் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குள் 30 வயதிற்கு மேல் ஆகிவிடுகிறது. இப்படி 30 வயதிற்கு மேல் கருத்தரிக்க முயற்சித்தால், அது முடியாத காரியமாகிவிடுகிறது.
ஏனெனில் வயதாக ஆக கருத்தரிக்கும் திறன் குறைவதால், 30 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, 30 வயதிற்கு மேல் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் வளர்தல் மற்றும் கருப்பையின் அகத்திரை கடினமாதல் போன்றவையும் தடையை ஏற்படுத்துகின்றன.
இருப்பினும் 30 வயதிற்கு மேல் பலர் கருத்தரித்து குழந்தைப் பெற்றுள்ளனர் என்பதால், முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதற்கு ஒருசில செயல்களை சரியாக பின்பற்ற வேண்டும். இதனால் எளிதில் கருத்தரிக்க முடியும். இப்போது அவை என்னவென்று பார்ப்போம்.
* கருத்தரிக்க முயற்சித்து முடியாவிட்டால், அப்போது உடனே பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்ளாமல், உண்ணும் உணவை சற்று கவனியுங்கள். ஏனெனில் ஒருசில உணவுகளை உண்பதன் மூலம், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஊட்டச்சத்து நிபுணரை கலந்தாலோசித்து, அவரது ஆலோசனையின் படி உணவுகளை உட்கொண்டு வாருங்கள்.
* வயதானால் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக பெண்கள் தான் அதிகமான எடையைப் பெறுவார்கள். ஆகவே உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டு, கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும்.
* வயதானால் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும். ஆகவே குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டால், மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். அதற்கு யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
* தினமும் உடலுறவு கொண்டால், கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தினமும் உடலுறவு கொள்ள வேண்டும்.
* தற்போது பெண்கள், ஆண்கள் என வேறுபாடு இல்லாமல், அனைவரும் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது என இருக்கின்றனர். ஆனால் தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்போர், ஆரம்பத்திலிருந்தே, இத்தகைய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.
மேற்கூறியவற்றையெல்லாம் நம்பிக்கையுடன் பின்பற்றினால், நிச்சயம் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.