Just In
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (21.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கோபப்பட்டா பிரச்சனையை சந்திப்பாங்களாம்…
- 16 hrs ago
இந்த ஈஸியான ரொமான்டிக் விஷயங்கள் உங்கள் காதல் வாழ்க்கையை சூப்பராக மாற்றுமாம்... என்ஜாய் பண்ணுங்க...!
- 17 hrs ago
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர்
- 18 hrs ago
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க... உங்க குணம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Don't Miss
- Automobiles
கண்ணை கவரும் நிறங்களில், ஷாங்காய் கண்காட்சியில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்!!
- News
ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா.. 90 பேருக்கு பாதிப்பு.. 56 ரயில்கள் ரத்து.. எங்க தெரியுமா
- Sports
ராகுலுக்கு ஒரு சட்டம்.. ரோஹித்துக்கு ஒரு சட்டமா.. போட்டிக்கு நடுவே "பந்தை" மாற்றிய அம்பயர்.. சர்ச்சை
- Movies
பெரிய இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல நடிகை பகீர் புகார்.. பரபரப்பில் திரையுலகம்!
- Finance
இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்தி சரிவு.. லாக்டவுன் மூலம் கடும் பாதிப்பு..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
ஏகாதசி விரதம் இருந்து கண் விழித்து, பெருமாளை தரிசித்தால், நம்முடைய சகல பாவங்களும், தோஷங்களும் நீங்குவதோடு, நிலையான செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், நமக்கு மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டத்திலேயே இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுக்குக்கு மிஞ்சுன மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சுன கடவுளுமில்லை என்பது போல், விரதத்திலேயே சிறந்த விரதமாக கடைபிடிக்கப்படுவது ஏகாதசி விரதமாகும். இந்த ஏகாதசி விரதம் என்பது மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான விரதமாகும்.
MOST READ: புதுப்பெண்ணை ஏன் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா என்று சொல்கிறார்கள் தெரியுமா?
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு பின் 11ஆவது நாள் வருவது ஏகாதசி. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி என்று கணக்கிட்டால் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசி திதிகள் வரும். அதில், மார்கழி மாதம், வளர்பிறையில் 11ஆம் நாள் வருவதைத் தான் இந்துக்கள் அனைவரும் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடிவருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி விழா
வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்தின் முதல் நாள் 2020 டிசம்பர் 25ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 25 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்தின் முதல் நாள் 2020 டிசம்பர் 25ம் தேதி தொடங்குகிறது.

மார்கழி மாதம்
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு 1 நாள் என்பது கணக்கு என வேதங்கள் சொல்கின்றன. அந்த கணக்கின்படி, மார்கழி மாதம், தேவர்களுக்கு விடியற்காலை நேரமாகும். மஹாவிஷ்ணுவும் இந்த மாதத்தில் தான் யோக நித்திரையில் இருந்து கண் விழிக்கும் மாதம். இதனால் தான் மார்கழி மாதம் சிறப்பு பெற்று விளங்குகிறது. கிருஷ்ணபரமாத்மாவும் மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளார்.

கீதா ஜெயந்தி
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசி திருநாளாக கொண்டாடி வருகிறோம். மஹாபாரதப் போர் நடைபெற்ற நாட்களில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளில் தான் கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்தார். அதனாலேயே வடமாநிலங்களில் ஏகாதசியை கீதா ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர்.

ஏகாதசி விரதம்
இந்த நாளில் இந்துக்கள் அனைவரும் விரதமிருந்து உண்ணாமல், உறங்காமல் அந்த பரந்தாமனையே நினைத்து, அவரின் புகழினைப் பாடி, அவரின் பராக்கிரம கதைகளை படித்து வரவேண்டும். மஹாவிஷ்ணு குறித்த ஆன்மீக சொற்பொழிவையும், பஜனை பாடல்களையும் பாட வேண்டும்.

தோஷங்கள் நீங்கும்
ஏகாதசி விரதம் இருக்கும் போது விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசம். காரணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதால், மஹாவிஷ்ணுவை அதி தேவதையாக கொண்ட புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நிலையான செல்வமும், நற்பலன்களும் கிடைக்கும். மேலும், திதி சூன்யம், பித்ரு தோஷம் ஆகியவையும் நீங்கும்.

மோட்சம் கிடைக்கும்
அதிகாலையில், குளிர்ந்த நீரில் குளித்து முடித்து அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று. பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும் போது, நாமும் அதன் வழியாக சென்று பெருமாளை தரிசிக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்கு மோட்சம் கிடைப்பதோடு, நிச்சயம் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பகல்பத்து ராப்பத்து விழா என 20 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம் போல திருமலை திருப்பதியிலும் இந்த விழா நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். அன்றைய தினம் ரங்கநாதரையும் ஏழுமலையானையும் தரிசிப்பது சிறப்பு.