Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சிவனுக்கு திங்கள்கிழமை விரதம் இருந்தால் ஏன் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது? வேறு என்ன சாப்பிடலாம்?
ஷராவண் மாத சிவனுக்கான திங்கள்கிழமை விரதத்தில் என்ன உணவுகளை சாப்பிடலாம், என்ன உணவு சாப்பிடக்கூடாது என்பது சாப்பிடக்கூடாது என்று விளக்கப்பட்டுள்ளது.
இந்து மாதமான 'சாவன்' அல்லது 'சிராவண மாதம்'வட இந்தியாவில் ஜூலை 17ம் தேதி தொடங்கி, ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்தோடு ஆகஸ்ட் 15ம் தேதி முடிவடைகிறது.

தென்னிந்தியாவில் 2019 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரைக்கும் இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. இந்து நாள்காட்டியின் சாவன் மாதம் வழக்கமாக ஜூலை - ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் வரும். இது இந்துக்களுக்கு விசேஷித்த மாதமாகும்.

சோம வார விரதம்
சிராவண மாதத்தில் சிவ பக்தர்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் மோட்ச பேறு அடையவும் இறைவனை வேண்டுவர். சிராவண மாதத்தில் திங்கள்கிழமை தோறும் அநேகர் 'சிராவண சோம வார விரதம்' என்னும் விரதத்தை கடைபிடிப்பர். இவ்விரதத்தை கடைபிடிப்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்; சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விரத முறைகள்
சிலர் கண்டிப்பாக சைவ உணவு பழக்கத்தை கடைபிடிப்பர். சிலரோ நாளுக்கு ஒருவேளை மட்டுமே உண்பர். இன்னும் சிலர் உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். சிலரோ சாப்பிடாமல் இருப்பர்.

நன்மைகள்
உண்ணாமல் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை மேம்படுதல், மூளையின் செயல்பாட்டை தூண்டப்படுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உடலுக்குக் கிடைக்கிறது.

என்ன சாப்பிடலாம்?
காலையில் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்று அல்லது இரண்டு குவளை வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். இது காலையில் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும்.

காலை உணவு
காலை உணவாக ஆப்பிள் அல்லது வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம். இது வயிறு நிறைந்த திருப்தியை தரும்.
இடைவேளையில் 5 வாதுமை அல்லது 2 வால்நட் பருப்புகள் சாப்பிடலாம். இதுபோன்ற பருப்புகள் அதிக கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து அடங்கியவை. ஆரோக்கியமான உணவாகிய இவை, மதிய உணவு வேளை வரைக்கும் பசியை அடக்க உதவும்.

மதிய உணவு
மதிய உணவாக ஒரு கிண்ணம் நிறைய சாலட் அல்லது ஜவ்வரிசி கிச்சடி சாப்பிடலாம். ஜவ்வரிசி உடலுக்கு ஆற்றலும் உத்வேகமும் அளிக்கக்கூடியது.
மாலை வேளையில் கிரீன் டீ மற்றும் சிங்காரா எனப்படும் நீர்கொம்பு செடி கொட்டை மாவில் செய்யப்பட்ட ரொட்டி உண்ணலாம். சிங்காரா மாவில் கார்போஹைடிரேட் அதிகம் உள்ளது. துத்தநாகம் (ஸிங்க்), பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து (கால்சியம்), இரும்பு சத்து ஆகியவையும் அடங்கியுள்ளன.

இரவு உணவு
இரவு உணவாக காய்கறிகள் சேர்த்து 2 சப்பாத்திகள், பருப்பு (டால்), சூப் மற்றும் தயிர் சாப்பிடலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
புனிதமாக கருதப்படும் சிராவண மாதத்தில் கத்தரிக்காயை சாப்பிட வேண்டாம். பழைய ஆகமங்கள் படி, கத்தரிக்காய் சுத்தமானதல்ல. ஆகவே, மக்கள் அதை சாப்பிடமாட்டார்கள். அறிவியல்பூர்வமாக, கத்தரிக்காயில் அநேக பூச்சிகள் உள்ளன; ஆவே, அது சாப்பிட ஏற்றதல்ல.
சாவன் மாதத்தில் விரதம் இருப்போர் பால் அருந்தக்கூடாது. ஆயுர்வேதத்தின்படி, பருவ மழைக்காலத்தில் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் வாதம், பித்தம், கபம் என எல்லா வகையிலும் உடலின் சமநிலையை கெடுக்கும்.
மது அருந்தக்கூடாது. மீன், முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவுகளையும் இம்மாதத்தில் சாப்பிடக்கூடாது.
மழைக்காலத்தில் இலைதழை உணவுகளில் பூச்சிகள் இருக்கும். கீரை வகைகளை சாப்பிடுவதால் அதிக பித்தநீர் சுரக்கும் ஆகவே, அவற்றை சாப்பிட வேண்டாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
பீன்ஸ் மற்றும் இலை தழை உணவுகளை தவிர்ப்பதோடு, பழங்கள், ஏனைய காய்கறிகளையும் அதிக அளவில் உண்ணக் கூடாது. தினமும் எட்டு முதல் பத்து குவளை (தம்ளர்) நீர் அருந்தவேண்டும். பொறித்த, மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடக் கூடாது.



Click it and Unblock the Notifications











