Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...
பல தடைகளை மீறி ஒரே பாலின ஜோடி திருமணம் செய்து கொண்டார்கள், வாங்க பார்க்கலாம்.
அன்பு எல்லா தடைகளையும் தற்போது உடைத்து எறிந்துள்ளது. அன்பு ஒன்றே போதும் எல்லா ஆத்மாக்களையும் நம்மால் சரி செய்ய முடியும். ஏன் இந்த அன்பைக் கொண்டு இரு நாடுகளுக்கிடையேயான உடைந்த உறவைக் கூட மீட்டெழுப்ப முடியும். அந்த மாதிரி தான் இந்த இரண்டு காதல் ஜோடிகளும் பல தடைகளை மீறி சேர்ந்துள்ளனர்.

காதல் என்பது ஆண் பெண் உறவு என்பதை மாற்றி ஒரே பாலினத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் இணைந்திருப்பது புதிது. இதன்படி சுந்தாஸ் மாலிக் மற்றும் அஞ்சலி சக்ரா ஆகியோர் தங்கள் காதலை வெளிப்படுத்தி இணைந்துள்ளனர். அவர்கள் இதை உலகுக்கு வெளிப்படுத்த முடிவு செய்தனர். இதனால் இந்தியருக்கும் பாகிஸ்தானியருக்கும் இடையே ஆன இந்த காதல் தற்போது புதிய அர்த்தம் பெற்றுள்ளது.
அன்பான போட்டோ ஷூட்
நியூயார்க்கில் அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த போட்டோ ஷூட் சமீபத்தில் இணையத்தை மூழ்கடித்துள்ளது. இந்த இரண்டு அழகான பெண்களும் பாரம்பரிய உடையில் கம்பீரமான காதலுடன் தங்கள் அன்பை வெளிப்படுத்தி இருப்பது அழகு. லெஹங்கா, சேலை அணிந்து பொட்டு வைத்து நகைகள் அணிந்து அழகாக காட்சி அளித்தனர். அதிலும் நியூயார்க் நகரத்தின் அழகிய பிண்ணனி கொண்டு மழைச் சாரல் நடுவே குடைகளுக்குள் எடுத்த படங்கள் அனைத்தும் எல்லா இதயங்களையும் வென்று விட்டது.
மாறான பாராட்டுகள்
இந்த ஒரே பாலின காதலை மக்களும் பாராட்டி தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். ஒரு ட்விட்டர் பயனர் இவ்வாறு கூறியுள்ளார்
" பல நிலைகளில் புரட்சி தலைகாட்டியுள்ளது, இந்து - முஸ்லிம், இந்தியா - பாகிஸ்தான், இரண்டு அழகான பெண்களிக்கிடையே மலர்ந்த காதல்" என்று கூறி அந்த பெண்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை வழங்கி உள்ளார்.
மற்றொரு பயனர்
"காதல், இதயம் மற்றும் உணர்வுகள் இணைய எந்த மதமும் எல்லைகளும் இல்லவே இல்லை, நீங்கள் ஓர் அற்புதமான ஜோடி. உங்கள் இருவருக்கும் கடவுளின் ஆசியும் அன்பும் இருக்கும் "என்று கூறியுள்ளார்.
இன்ஸ்ட்டாகிராம் பகிர்வு
பாகிஸ்தானிய கலைஞரான மாலிக் இந்த புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் பதிவு செய்து கொண்டுள்ளார். குர்தா போன்ற கேஷூவல் ஆன ஆடைகளிலிருந்து பாரம்பரிய உடைகளான லெஹங்கா போன்றவற்றிற்கு மாறுவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் எங்களுடைய போட்டோ ஷூட் அழகாக வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கை தீர்ப்பு
6 செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பு இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை நியாயப்படுத்தியது. என்ன தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் சமூக மக்கள் இதை ஏற்றுக் கொள்வது எளிதான விஷயமல்ல. ஆனால் இன்றளவும் சுற்றுப்புறங்களில் இந்த மாதிரியான ஓரினச் சேர்க்கையாளர்களை ஒரு மாதிரியாக ஒதுக்கி வைப்பது பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
சமூக மக்கள் இதற்கு சார்பற்றதாகவே இருக்கின்றனர். சமீபத்தில், இந்த நியாயப்படுத்தலுக்காக போராடிய இரண்டு பெண் வழக்கறிஞர்களான மேனகா குர்ஸ்வாமி மற்றும் அருந்ததி கட்ஜு ஆகியோர் ஒரு ஜோடியாக வெளியே வந்து புரட்சி செய்தனர். அதைத் தொடர்ந்து இந்த ஜோடிகளும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இயற்கையாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பது பெரிய விஷயம்.

மாற்றங்கள் படிப்படியாக
இந்த மாதிரியான இயற்கை புரிதல் தற்போது தான் படிப்படியாக ஏற்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் சுந்தாஸ் மற்றும் அஞ்சலியின் போட்டோஷூட் ஒரு மில்லியன் நம்பிக்கையான இதயங்களுக்கு சூரிய ஒளியைக் கொடுத்துள்ளது என்றே கூறலாம். அன்பு இனி ஒரு குற்றமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட ஒன்றாகவோ இருக்காது. மாறாக அவர்களின் வாழ்க்கையின் அழகிய கொண்டாட்டமாக இருக்கும்.
இயற்கையோடு ஒட்டிய ஒரு புதிய உலகத்தை உருவாக்க இந்த சிறு மாற்றம் நமக்கு உத்வேகத்தை கொடுக்கும் என நாம் நம்புவோம்.



Click it and Unblock the Notifications