Just In
- 1 hr ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 7 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 8 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 8 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா?
நம் வீட்டு வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பதும் ஒரு ஐதிகம். இதனால் சத்தம் போடாமல் கதவினை திறப்பதும் கதவினை அடைப்பதும் நல்லது. நாம் போடும் சத்தம் குலதெய்வத்திற்கு இடையூறாக இருக்கும்.
நாம் வசிக்கும் வீட்டிற்கு தலைவாசல் முக்கியமானது. வீட்டிற்குள் வருபவர்களை வரவேற்கவும் காலில் உள்ள தூசிகளை துடைத்து விட்டு வரவும் மிதியடிகளை போட்டிருப்போம். அந்த மிதியடி சிவப்பு நிறமானதாக இருந்தால் அது சிறப்பானது. காரணம் சிவப்பு பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம். எனவேதான் விஐபிக்களை வரவேற்க ரெட் கார்ப்பெட் விரித்து வரவேற்கும் பழக்கம் உருவானது.
ஒரு வீட்டிற்கு தலை வாசல் மிக முக்கியமாகும். எவ்வளதான் பெரிய வீட்டை கட்டினாலும் வீட்டிற்கு வாசல் முறையாக அமையவில்லை என்றால் அவ்வீட்டில் லட்சுமி குடியிறுக்கமாட்டாள். லட்சுமி தேவி வீட்டில் புகுந்தால் தான் வீடு சுபிட்சமடையும். சகல சம்பத்துக்களும் கிடைக்கும். நன்மையாகட்டும், தீமையாகட்டும், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி யாகட்டும் எதுவுமே வாசலை கடந்துதான் நம்மை நோக்கி வருகின்றன. நல்லனவற்றை உள்ளே அனுப்பி தீயனவற்றை வெளியே அனுப்பும் பொறுப்பு வீட்டின் தலை வாசலுக்கு மட்டுமே உண்டு.
MOST READ: மார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்!
வீட்டு நிலைப்படிக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அழகுபடுத்துகிறோம். மாவிலை தோரணம் கட்டுகிறோம். நிலைப்படிகளில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் போது, நிலைப்படிக்கு பூஜை செய்வதை பார்த்திருக்கலாம். இது அழகு செய்வதோடு மட்டுமல்லாமல் ஒரு தெய்வ வழிபாடும் உள்ளது.