மார்கழி மாதத்தில் இந்த விசயத்தை எல்லாம் மறந்து கூட செய்யாதீங்க...

மார்கழி மாதத்தை பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக முன்னோர்கள் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் மார்கழி மாதம். பீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள்.

மார்கழி மாதத்தை பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாக முன்னோர்கள் கருதினார்கள். வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதம் மார்கழி மாதம். பீடு என்றால் பெருமை மிகுந்த அல்லது உயரிய என்று பொருள். பீடு உடைய மாதமாகிய மார்கழியில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

Dos And Donts During Margazhi Month

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபட வேண்டிய காலமாக மார்கழியைக் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள்.

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி வரும் காலம் மார்க்கசிர என்று வட மொழியில் அழைக்கின்றனர். தமிழில் மார்கழியாக அழைக்கப்படுகிறது. இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. இவர் மார்க்கண்டேயரின் தந்தை. மார்க்கண்டேயரின் ஜென்ம நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்க்கண்டேயர்

மார்க்கண்டேயர்

சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர். தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி அவர். மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்தவர். 16 வயதில் மரணம் என்று தெரிந்தும் சிவனை ஒவ்வொரு நிமிடத்திலும் சிந்தையில் நினைத்தவர். மார்கழி மாதத்தில் மரணத்தை வெல்லும் ம்ருத்யுஞ்சய ஹோமம் செய்ய உகந்தது.

ஆண்டாள் மாதம்

ஆண்டாள் மாதம்

ஸ்ரீ ரங்கநாதனை கணவனான அடைய வேண்டும் என்று பாவை நோன்பிருந்து ஆண்டாள் திருப்பாவை பாடிய மாதம் மார்கழி மாதம். வைகுண்ட ஏகாதசி விழாவும் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படும் மாதம் மார்கழி மாதம். ஆஞ்சநேயர் மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

மார்கழியில் செய்யக்கூடியவை

மார்கழியில் செய்யக்கூடியவை

மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு வரன் பார்க்கலாம், ஜாதகம் கொடுக்கலாம், பொருத்தம் பார்க்கலாம். சீமந்தம் செய்யலாம், நிலம் மற்றும் வீடு வாங்க அட்வான்ஸ் கொடுக்கலாம். நிலம் பத்திரப்பதிவு செய்யலாம். அதிகாலையில் பஜனை பாட வேண்டும். திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடுவதும் கேட்பதும் புண்ணியம். மார்கழியில் இவற்றை கண்டிப்பாக பாடி கேட்க வேண்டும்.

மார்கழியில் செய்யக்கூடாதவை

மார்கழியில் செய்யக்கூடாதவை

மார்கழியில் விதை விதைக்கக் கூடாது. கல்யாணம் பண்ணக்கூடாது என்று சொல்வார்கள். அதிகாலைக்குப் பிறகு தூங்கக் கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்கக் கூடாது என்பார்கள். அதீதமான ஆக்சிஜன் உடம்புக்கு கிடைக்க வேண்டும் எனவே 4.30 மணிக்கு குளித்து விட்டு வாசல் தெளித்து அரிசி மாவில் கோலம் போட வேண்டும்.

புது வீடு மாறக்கூடாது

புது வீடு மாறக்கூடாது

மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா,வாடகை வீடு மாறுதல்,அலுவகம் மாறுதல்,திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், காது குத்துதல், புதிய வீடு பத்திர பதிவு செய்யக்கூடாது, புதிய வண்டி வாகனம் வாங்கக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 17, 2019, 16:52 [IST]
Desktop Bottom Promotion