Latest Updates
-
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகியுள்ள ராஜயோகம்..இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம்...! -
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா?
பிரனாப் முகர்ஜிக்கு ஏன் பாரத ரத்னா கொடுத்தாங்க தெரியுமா?... இதோ அவரைப்பத்தி தெரிஞ்சிக்கங்க...
பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பற்றிய வாழ்க்கை வரலாறு மற்றும் உண்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருது பாரத் ரத்னாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 'பிரணாப் டா' என்று பிரபலமாக அறியப்பட்ட இந்த காங்கிரஸின் அதிபர் இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பணியாற்றினார் மற்றும் அவரது ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் ஏராளமான குறிப்பிடத்தக்க பதவிகளையும் அமைச்சகங்களையும் கையாண்டார்.

பெருமைக்குரிய மற்றும் மரியாதைக்குரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒரு முன்மாதிரித் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை பயணத்தை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

குழந்தை பருவமும் ஆரம்பகால வாழ்க்கையும்
அவர் மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள மிராட்டி என்ற சிறிய கிராமத்தில் டிசம்பர் 11, 1935 இல் பிறந்தார். இவர் பெங்காலி பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை கமடா கிங்கர் முகர்ஜி ஒரு சுதந்திர போராட்ட வீரர், இந்திய சுதந்திர இயக்கத்தில் இவர் பங்குபெற்று இருந்தார். இவருடைய தாயார், ராஜலக்ஷ்மி முகர்ஜி ஒரு இல்லத்தரசி.

படிப்பு
பீர்பம் மாவட்டம், சூரியில் உள்ள சூரி வித்யாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, ஒரே நேரத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் வரலாறு மற்றும் எல்.எல்.பி பட்டம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். கொல்கத்தாவில் உள்ள துணை கணக்காளர்-ஜெனரல் (தபால் மற்றும் தந்தி) அலுவலகத்தில் உயர் பிரிவு எழுத்தராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் அறிவியலின் விரிவுரையாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை
1969 ஆம் ஆண்டு மிட்னாபூர் இடைத்தேர்தலில் வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கிய பின்னர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரை தேசிய இந்திய காங்கிரசுக்கு நியமித்தார். ஜூலை 1969 இல் மாநிலங்களவையில் உறுப்பினரானார். 1982 இல் அவருக்கு நிதி அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது. நிதியமைச்சராக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மன்மோகன் சிங்கை நியமிக்கும் கடிதத்தில் கையெழுத்திட்டார்.

அரசியலில் ஒதுங்குதல்
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் சில ஆண்டுகளாக அவர் அரசியல் பணியில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்திருந்தார். 1991 ல் ராஜீவ் காந்தி இறந்த பின்னர் அவரது அரசியல் வாழ்க்கை புத்துயிர் பெற்றது, அடுத்த பிரதமர் பி.வி.நர்சிம்மராவ் அவரை மத்திய அமைச்சரவை அமைச்சராக தேர்வு செய்தார். பிரதமர் ராவின் ஆட்சியின் போது 1995 முதல் 1996 வரை முதன்முறையாக வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் சோனியா காந்தியை அரசியலில் நுழைந்ததற்காக வழிகாட்டியதாக இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர் 2004 ல் மக்களவைத் தலைவரானார்.

மன்மோகன் சிங் அரசு
அவர் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் பல குறிப்பிடத்தக்க பதவிகளைக் கையாண்டார். பாதுகாப்பு, நிதி, வர்த்தகம் மற்றும் வெளியுறவு அமைச்சுகளை நிர்வகிப்பதைத் தவிர, நாட்டின் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியையும் அவர் வழி நடத்தினார். வங்காள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீண்ட காலம் இருந்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய பிரணாப் முகர்ஜி 2012 ல் பிரதான அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஜூலை 25, 2012 அன்று இந்திய ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர் இந்த மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் பெங்காலி ஆவார்.

விருதுகள் மற்றும் மரியாதைகள்
பாரத ரத்னாவைப் பெறுவதற்கு முன்பு, 2008 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவருக்கு பங்களாதேஷ் விடுதலைப் போர் மரியாதை (5 மார்ச் 2013; பங்களாதேஷ்), கிராண்ட் கிராஸ் ஆஃப் நேஷனல் ஆர்டர் ஆஃப் ஐவரி கோஸ்ட் (ஜூன் 2016; ஐவரி கோஸ்ட்)), கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் III (28 ஏப்ரல் 2017; சைப்ரஸ் போன்ற பல்வேறு அயல்நாட்டு விருதுகளும் வழங்கப்பட்டன. உலகின் பல்வேறு பல்கலைகழங்களும் பிரணாப் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம், D.Litt பட்டம் போன்றவற்றை வழங்கி கெளரவித்தன.

பாரத ரத்னா
பாரத் ரத்னா அறிவிக்கப்பட்டதும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ட்விட்டரில் தனது நன்றியைத் தெரிவித்தார். "இந்திய மக்களுக்கு எனது ஆழமான பணிவுடன் மற்றும் நன்றியுணர்வுடன், எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமான பாரத ரத்னா விருதை நான் பெற்றுக் கொள்கிறேன்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறப்பான சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரை வாழ்த்தினர். பிரதமர் மோடியின் வாழ்த்து ட்வீட், "பிரணாப் டா நம் காலத்தின் சிறந்த அரசியல்வாதி. அவர் பல தசாப்தங்களாக தன்னலமற்ற மனிதராக அயராது தேசத்திற்கு சேவை செய்துள்ளார், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒரு வலுவான முத்திரையை பதித்திருக்கிறார். அவரது ஞானத்திற்கும் புத்திசாலித் தனத்திற்கும் மிகச்சில இணைகள் மட்டுமே உள்ளன. அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி".



Click it and Unblock the Notifications











