Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
மலையையே தூக்கிய அனுமனால் ஏன் சீதையை அசோக வனத்தில் இருந்து தூக்கி வர இயலவில்லை தெரியுமா?
சஞ்சீவி பர்வதத்தை தூக்கி ஒற்றை கையில் தூக்கி வந்த அனுமன் ஏன் அசோக வனத்தில் சீதையை சந்தித்த போது ஏன் சீதையை இராமனிடம் தூக்கி வரவில்லை என்று தோன்றியிருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். மகாவிஷ்ணு இராம அவதாரம் எடுத்து இராவணனை அழித்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டிய பெரும் போரே இராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாசமாக உள்ளது. இராமாயண போர் நடைபெற காரணமாக இருந்த ஆரம்ப புள்ளி இராவணன் சீதையை இலங்கைக்கு தூக்கி சென்றதுதான்.

இராமர், இலட்சுமணன் மற்றும் அனுமன் மூவரும் வானர சேனையை சேர்த்து கொண்டு கடல் மார்க்கமாக பாலம் அமைத்து இலங்கை சென்று இராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டனர். ஆனால் சீதை இலங்கையில்தான் இருக்கிறார் என்று கண்டறிய இராமருக்கு உதவி புரிந்ததே வாயுமைந்தன் அனுமன்தான். இந்த பதிவில் சீதையை அனுமன் அசோக வனத்தில் சந்தித்த போது அவர்களுக்குள் நிகழ்ந்த சுவாரஸ்யமான உரையாடல் என்னவென்று பார்க்கலாம்.

நீண்ட நாள் கேள்வி
இராமாயணம் படித்த அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வி பராக்கிரம சாலியான அனுமன், பாதி இலங்கையை தன் வாலில் இருந்த நெருப்பு மூலம் எரித்த அனுமன், சஞ்சீவி பர்வதத்தை தூக்கி ஒற்றை கையில் தூக்கி வந்த அனுமன் ஏன் அசோக வனத்தில் சீதையை சந்தித்த போது ஏன் சீதையை இராமனிடம் தூக்கி வரவில்லை என்று தோன்றியிருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

அனுமனின் யோசனை
நமக்குள் தோன்றிய இந்த கேள்வி அனுமனுக்குள் எழாமல் இருந்திருக்குமா? அனுமனுக்கும் இந்த யோசனை எழுந்தது. தனது பிரபு இராமரின் மனவேதனையை நொடியில் போக்க தங்களை ஒளியை விட அதிகமான வேகத்தில் அவரிடம் சென்று சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் கூறினார். ஆனால் அதனை சீதை மறுத்திவிட்டார்.

அனுமனின் கோரிக்கை
அனுமன் சீதையை ஒப்புக்கொள்ள வைக்க " தாயே! என் முதுகில் அமர்ந்து கொள்ளுங்கள். கடல்களை கடந்து யாகத்தில் இருக்கும் நெருப்பில் இருந்து வரும் ஆவி எப்படி தேவர்களை சென்று அடைகிறதோ அதேபோல உங்களை என் பிரபுவிடம் சேர்த்து விடுகிறேன் " என்று கூறினார்.

சீதையின் பதில்
ஆனால் சீதைக்கு அனுமனின் பலத்தின் மேல் சந்தேகம் எழுந்தது. ஏனெனில் அனுமனின் உருவம் மிகச்சிறியதாக இருக்கிறதே இவரின் முதுகில் எப்படி தான் அமர்ந்து பறக்க முடியும் என்று யோசிக்க தொடங்கினார்.

அனுமனின் உருவம்
சீதையின் தயக்கத்தை உணர்ந்த அனுமன் தன் தன் உடலை மலையின் அளவை போல பெரிதாக மாற்றினார். அனுமனின் ஆற்றலை கண்டு சீதை வாயடைத்து போனார். இருப்பினும் அனுமனுடன் வருவதற்கு சீதை மறுத்து விட்டார்.

எதிர் வாதம்
சீதை தன் கணவர் இராமனை தவிர வேறெந்த ஆடவனையும் தீண்ட இயலாது என்று கூறிவிட்டார். இராமரின் பக்தராக அனுமன் இருந்தாலும் அவரை தன்னால் தீண்ட இயலாது என்று கூறி சீதை அனுமனுடன் வர மறுத்து விட்டார்.

அனுமனின் சாதுர்யம்
இந்த தருணத்தில் தான் அனுமன் தன் பக்தியையும், சாதுர்யத்தையும் வெளிப்படுத்தினார். அவர் கூறினார், " நான் வெளி ஆண் அல்ல. நான் உங்கள் மகன்தான். உங்கள் மகனை தொடுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. நான் என் தந்தையான இராமபிரானிடம் உங்களை அழைத்து செல்கிறேன் " என்று கூறினார்.

சீதையின் குழப்பம்
இதனை கேட்ட சீதை அதிர்ச்சியடைந்தார். அனுமனின் இந்த கோரிக்கையை எப்படி மறுப்பது என்று சீதை குழப்பமடைந்தார். அனுமன் கூறிய இந்த வாதத்தை மறுதலிப்பது என்பது முடியாத காரியம் என்று உணர்ந்தார். எனவே அவர் வேறு காரணங்களை யோசித்தார்.

இராமரின் ஆணை
இராமர் அனுமனுக்கு வழங்கிய ஆணையை அவருக்கு நினைவுபடுத்தினார் சீதை. சீதையை கண்டுபிடி ஆனால் இங்கு அழைத்து வராதே என்று இராமர் கூறியிருந்தார். மற்றொரு காரணம் அனுமன் இவ்வாறு சீதையை அழைத்து சென்றால், உலகத்திற்கு இராமரின் பராக்கிரமம் மீது சந்தேகம் எழும், இராமரால் தன் மனைவியை மீட்க முடியாமல் போனதென பேசுவார்கள் என்று சீதை கூறினார்.

அனுமனின் சம்மதம்
இதை கேட்டவுடன் அனுமன் ஒப்புக்கொண்டார். சீதை ஏன் தன்னுடன் வர மறுத்துவிட்டார் என்று அனுமன் உணர்ந்து கொண்டார். சீதையை வணங்கி " தாயே நான் நீங்கள் இருக்கும் இடத்தை பிரபுவிடம் கூறி விரைவில் உங்களை மீது செல்கிறேன் " என்று கூறினார். அதற்கு பின் நடந்த நிகழ்வுகளை நாம் நன்கு அறிவோம்.



Click it and Unblock the Notifications











