Just In
- 2 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 2 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 3 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 4 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இராவணனின் வீழ்ச்சிக்கு பின்னர் இராமருக்கு உதவிய வானர சேனைக்கு என்ன நடந்தது தெரியுமா?
கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும் இராமனால் வானர சேனையின் துணையின்றி இராவணனை வீழ்த்தி இருக்க முடியாது. ஆனால் போரின் முடிவுக்கு பிறகு வானர சேனை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியுமா?
இராமாயண போர் என்பது இராமர் அவரின் மனைவியை கவர்ந்து சென்ற இராவணனை அழித்து சீதையை மீட்க நடத்தப்பட்டதாகும். இராமர் அயோத்தியின் அரசனாக இருந்தாலும் அவர் வனவாசத்தில் இருந்ததால் அவரால் தன் நாட்டு படையை உதவிக்கு அழைக்க இயலவில்லை. இந்த சூழ்நிலையில்தான் வானர சேனை இராமருக்கு உதவியது.
கடலளவு இருந்த இராவணனின் அசுர சேனையை அனுமன், ஜம்பவான், சுக்ரீவன், அங்கதன் போன்ற மாவீரர்கள் வழிநடத்திய வானர சேனை துவம்சம் செய்தது. வானர சேனையில் இருந்த ஒவ்வொரு வானரமும் பத்து வீரருக்கு சமமான பலத்தை கொண்டிருந்தார்கள். கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும் இராமனால் வானர சேனையின் துணையின்றி இராவணனை வீழ்த்தி இருக்க முடியாது. ஆனால் போரின் முடிவுக்கு பிறகு வானர சேனை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
உத்தர காண்டம்
இராமாயணத்தில் உத்தர காண்டம் போருக்கு பிறகான வானர சேனையின் நிலையை விளக்குகிறது . இராமரின் பூமியில் இருக்கும் காலம் முடியப்போவதை மரணத்தின் கடவுளான எமன் அவரிடம் கூறியவுடன் இராமர் சராயு நதியில் மூழ்கி தன் உயிரை விட முடிவெடுத்தார்.
அங்கதன் பொறுப்பு
இராமரின் முடிவை கேள்விப்பட்ட சுக்ரீவன் அதிர்ச்சியடைந்து வாலியின் மகன் சுக்ரீவனிடம் வானர சேனையையும், கிஷ்கிந்தை ராஜ்ஜியத்தையும் பார்த்துக்கொள்ள கூறிவிட்டு சுக்ரீவனும் சில வானரர்களும் அயோத்தி சென்று இராமருடன் சேர்ந்து உயிரை விட முடிவெடுத்தனர்.
வானரங்கள்
சுக்ரீவனுடன் வானரங்கள், கரடிகள், அரக்கர்கள் என பலரும் அந்த இடத்தில் கூட தொடங்கினர். பூமியை விட்டு சொர்க்கத்திற்க்கு செல்ல முடிவெடுத்த இராமரை காண்பதற்கு முனிவர்கள், தேவர்கள் என அனைவரும் சராயு நதிக்கரையில் கூடினர்.
MOST READ: ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா?
இராமரிடம் அவர்கள் என்ன கூறினார்கள்
அங்கு கூடியிருந்த அனைவரும் இராமனிடம் " அனைவரையும் விட மேன்மை வாய்ந்த இராமனே நீ உலக நன்மைக்காக பூமியை விட்டு சொர்க்கம் சென்றால் எமனையும் நாங்கள் எதிர்க்க தயார்" என்று கூறினர். சுக்ரீவனோ " பிரபு! அங்கதனை அரியணையில் அமர வைத்து விட்டேன் , அரசே நானும் உங்களை பின்தொடர்ந்து வர அனுமதியுங்கள் " என்று கூறினார்.
இராமரின் பதில்
வானரங்களின் வார்த்தைகளை கேட்ட இராமர் அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அவர் அனுமனிடம் " அனுமனே நீ என்னுடன் வராதே! நீ என்றென்றும் நிலைத்து வாழ்வாய். இந்த பூமியில் என் பெயர் இருக்கும் வரை நீ அனைவராலும் வணங்கப்படுவாய் " என்று கூறினார். தனது பிரபுவின் வாயில் இருந்து இந்த வார்த்தைகளை கேட்ட அனுமன் " உங்களின் கட்டளைப்படி இந்த உலகத்தில் சத்தியம் வாழ்கிற வரை நானும் வாழ்வேன் " என்று கூறினார்.
வானரர்களின் உறுதிமொழி
அனுமன் ஜம்பவான், மைந்தா, ரிவிடன் மற்றும் பிற வானரர்களிடம் கலியுகம் இருக்கும் வரை நீங்கள் அனைவரும் வாழவேண்டும் என்று கூறினார். சுக்ரீவன் மற்றும் மற்ற வானரர்கள் இராமருடன் சேர்ந்து பூமியை விட்டு பிரியப்போகிறார்கள் என்று கூறினார். அனுமன், ஜம்பவான், மைந்தா, ரிவிடன், நிலன், நலன் மற்றும் இன்னபிற ஐந்து வானரங்கள் இன்றும் கலியுகம் இருக்கும்வரை இருப்போம் என்று உறுதி மொழி எடுத்தனர்.
மகாபாரதத்தில் வானரர்கள்
உறுதிமொழி எடுத்துக்கொண்ட வானரர்கள் அதற்க்கு பின் மகாபாரதத்திலும் காட்சியளித்தனர். இதில் மிகவும் புலப்பெற்ற வானரர் ஆஞ்சநேயர்தான். வாயு மைந்தர்களான அனுமனும், பீமனும் வனத்தில் சந்தித்து கொண்டார்கள். அர்ஜுனனும் அனுமனை சந்தித்தான். போரில் அர்ஜுனன் ரதத்தில் அனுமன் வீற்றிருந்தார். உறுதிமொழி எடுத்த மற்றொரு வானரனான ஜம்பவான் கிருஷ்ணரை சந்தித்தார். கிருஷ்ணருடன் போரிட்டு தோற்று தன் மகளையும் கிருஷ்ணருக்கு மணம் முடித்து வைத்தார்.
MOST
READ:
இந்த
ராசிகளில்
பிறந்தவர்கள்
ஷாப்பிங்
செய்தே
சொத்தை
அழித்து
விடுவார்களாம்
தெரியுமா?
மற்ற வானரங்கள்
அங்கதனுக்கு பிறகு வானர சேனை மைந்தா மற்றும் ரிவிடன் வசம் வந்தது. யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் நடத்தியபோது ஒவ்வொரு திசைக்கும் தன்னுடைய ஒவ்வொரு சகோதரனை அனுப்பி அங்கு இருக்கும் ராஜ்ஜியங்களை ராஜசூய யாகத்தை ஏற்றுக்கொள்ள செய்யும் படி பணித்தான். அந்த வகையில் கிஷ்கிந்தைக்கு சகாதேவன் சென்றான். சகாதேவனின் வேண்டுகோளை ஏற்க மறுத்த வானர சகோதரர்கள் அவனை போருக்கு அழைத்தனர். ஏழு நாட்கள் போர் நடந்தது, இறுதியில் குரு வம்ச இளவரசனான சகாதேவனின் மகிமையை உணர்ந்து அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்.