Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த புதுப்பேட்டை விஜய ரகுநாத தொண்டைமான்!
இந்த நாள், அந்த வருடம் - செப்டம்பர் 24!
ஆங்கிலேயனின் கண்களில் அச்சத்தை விதைத்த அரசன் கட்டபொம்மன். கட்டபொம்மனின் வீரத்தை இன்றைய தலைமுறை அறிய செய்த பெரிய ஆதாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் கட்டபொம்மன் படமும், அதில் அவர் பேசிய, "எங்களோடு வயலுக்கு வந்தாயா..." எனும் வீர வசனமும்.

இதே தேதியில் (செப்டம்பர் 24) 1799ம் ஆண்டு கட்டபொம்மன் மற்றும் அவருடன் 6 போரையும் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து, பின் செப் 29-ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 24!
பிறப்பு!
1777 - இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய மாமன்னர்!
சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரஸ்வதி மகால் நூலகத்தை அமைத்தார்.
1941 - தெ. ஞானசுந்தரம், தமிழ்ப் பேராசிரியர்!
நாகப்பட்டின மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்துள்ள குழையூர் சிற்றூரில் பிறந்தவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள். கும்பக்கோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் இவர் பெற்றுள்ளா. இவர் பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவர் ஆவார்.
இறப்பு!
2006 - நடிகை பத்மினி!
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர் பத்மினி. இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்களை "திருவாங்கூர் சகோதரிகள்" என பிரபலமாக அழைத்து வந்தனர்.
சோவியத் ஒன்றியம் நடிகை பத்மினிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
வரலாறு!
0622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு (ஹிஜ்ரா) இடம்பெயர்ந்த தினம் இன்று.
1674 - பேரரசர் சிவாஜியின் 2வது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) நடைபெற்றது.
1789 - அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்ட நாள்.
1799 - கட்டபொம்மன் மற்றும் அவருடன் 6 போரையும் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து, பின் செப் 29-ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1979 - உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை ஆரம்பமான நாள்.
இணைப்பு!
1664 - நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
1968 - சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.



Click it and Unblock the Notifications