Just In
- 41 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த புதுப்பேட்டை விஜய ரகுநாத தொண்டைமான்!
இந்த நாள், அந்த வருடம் - செப்டம்பர் 24!
ஆங்கிலேயனின் கண்களில் அச்சத்தை விதைத்த அரசன் கட்டபொம்மன். கட்டபொம்மனின் வீரத்தை இன்றைய தலைமுறை அறிய செய்த பெரிய ஆதாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷனின் கட்டபொம்மன் படமும், அதில் அவர் பேசிய, "எங்களோடு வயலுக்கு வந்தாயா..." எனும் வீர வசனமும்.
இதே தேதியில் (செப்டம்பர் 24) 1799ம் ஆண்டு கட்டபொம்மன் மற்றும் அவருடன் 6 போரையும் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து, பின் செப் 29-ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நாள், அந்த வருடம்: செப்டம்பர் 24!
பிறப்பு!
1777 - இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய மாமன்னர்!
சரபோஜி மாமன்னர், மராத்திய போன்சலே வம்சத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். இவர் தஞ்சையின் பிரபலமான சரஸ்வதி மகால் நூலகத்தை அமைத்தார்.
1941 - தெ. ஞானசுந்தரம், தமிழ்ப் பேராசிரியர்!
நாகப்பட்டின மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்துள்ள குழையூர் சிற்றூரில் பிறந்தவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள். கும்பக்கோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் இவர் பெற்றுள்ளா. இவர் பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவர் ஆவார்.
இறப்பு!
2006 - நடிகை பத்மினி!
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தவர் பத்மினி. இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்களை "திருவாங்கூர் சகோதரிகள்" என பிரபலமாக அழைத்து வந்தனர்.
சோவியத் ஒன்றியம் நடிகை பத்மினிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
வரலாறு!
0622 - முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு (ஹிஜ்ரா) இடம்பெயர்ந்த தினம் இன்று.
1674 - பேரரசர் சிவாஜியின் 2வது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) நடைபெற்றது.
1789 - அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்ட நாள்.
1799 - கட்டபொம்மன் மற்றும் அவருடன் 6 போரையும் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் கைது செய்து, பின் செப் 29-ல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1979 - உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை ஆரம்பமான நாள்.
இணைப்பு!
1664 - நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.
1968 - சுவாசிலாந்து ஐநாவில் இணைந்தது.