Latest Updates
-
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
அன்றும், இன்றும் - கடந்த 100 வருடத்தில் உலகம் கண்ட மாற்றம் - புகைப்பட தொகுப்பு!
அன்றும், இன்றும் - கடந்த 100 வருடத்தில் பனிப்பாறைகள் கண்டுள்ள மாற்றங்கள்!
கடந்த நூறு ஆண்டுகளில் தான் உலகில் பல மாபெரும் மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி, புவியியல் மாற்றங்கள் என மனிதனின் கண்டுப்பிடிப்பால் உலகம் தன்னில் பல ஆறாத காயங்கள் கொண்டு வருந்தி வருகிறது.
இரண்டு உலகப்போர், எண்ணிலடங்கா அணு ஆயுத சோதனைகள், எண்ணெய் கிணறுகள் அனைத்துக்கும் மேலாக சுற்றுப்புற மாசு, தண்ணீர் மாசு, கடலையே கூவமாக்கிய தனிப்பெருமை மனிதனை மட்டுமே சேரும்...

All Image Credits: Christian Photography
கடந்த எந்த நூற்றாண்டிலும் பதிவாகாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வெப்ப நிலை பதிவாகியிருக்கிறது. சென்ற நூறு வருடத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், எப்படி இருந்த உலகம், எப்படி மாறியுள்ளது என்பதை காட்டும் ஒரு புகைப்பட தொகுப்பு தான் இது.
அன்றும், இன்றும் உலகின் நிலை...

க்லேஸியர்!
க்லேஸியர் எனப்படும் பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருவதற்கு காரணம் உலகளவில் மாறியுள்ள காலநிலை மாற்றம் தான். இதனால், கடல் அளவு மிகுதியாக அதிகரிக்கும். இதன் தாக்கத்தால் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கலாம்.

தூய்மையான நீர்!
பனிப்பாறைகளில் தான் தான் உலகின் 68.7% தூய்மையான நீர் தேங்கி இருக்கிறது. உலகில் பத்து சதவீத நிலப்பரப்பு பனிப்பாறைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால், இது காலநிலை மாற்றத்தால் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.

மூழ்கிய தீவுகள்!
தொடர்ந்து பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் நீர் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மனித உயிர்கள் வாழாதிருந்த இந்திய பெருங்கடல், அண்டார்டிகா பெருங்கடல் பகுதிகளில் இருந்த பல சின்ன, சின்ன தீவுகள் மூழ்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலக போர்!
வட கொரியா, அமெரிக்கா பிரச்சனை, தீவிரவாதம், மதவாதம் என உலகில் பல பிரச்சனைகள் தலைதூக்கி மூன்றாம் உலக போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இயற்கை ஏற்கனவே நம் மீது ஒரு பெரும் இயற்கை சீற்றம் மூலம் மூன்றாம் உலக போர் தொடுக்க தயாராகிவிட்டது. இதை தடுக்க, உலகம் வெப்பம் அடைந்து வருவதை தடுப்பது குறித்து உலக நாடுகள் ஒன்றுகூடி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அபாயம்!
ஆர்டிக், அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் ஏற்கனவே பல பனி பாறைகள், பனி குன்றுகள் மொத்தமாக உருகி கடலில் கலந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்தான்புல் முதல் சென்னை வரை!
நியூயார்க், லண்டன், இஸ்தான்புல், சிட்னி, மும்பை, சென்னை, சிங்கபூர், ஜப்பான் என உலகின் பல முக்கிய பகுதிகள் இன்னும் 30 - 40 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை காணவிருக்கின்றன என்பது மட்டுமே இப்போதைக்கு கூற முடியும் சாத்தியக்கூறு.

திட்டங்கள்?
ஆனால், அந்த தாக்கத்தினால் அங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம், அப்பகுதியை சார்ந்த பொருளாதார, வர்த்தக இடமாற்றம் குறித்து தற்போதைய அரசியல்வாதிகள் என்ன திட்டங்கள் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் சுழியம் என்பதை தவிர வேறு எந்த பதிலும் இல்லை.



Click it and Unblock the Notifications











