Latest Updates
-
மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் தேடிவருமாம் -
வார ராசிபலன் (12 ஏப்ரல் 2026-18 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம் -
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம் -
வெயில் காலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க - இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க -
மங்களூர் ஸ்பெஷல் முளைகட்டிய பாசிப்பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
தமிழ் புத்தாண்டு அன்று உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு மோசமான பலன்களை தரப்போகுது -
இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கியது யார்? அந்த திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? -
இட்லி, தோசைக்கு ஏற்ற பச்ச மாங்கா வேர்க்கடலை சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
இந்திய சட்டப்புத்தகத்தைப் பற்றிய சில திகைப்பான தகவல்கள்!!!
1947 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் நாள், அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் பீ. இரா. அம்பேத்கர் (தலைமை), கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்தியாவின் "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில அரிய தகவல்கள்!!!
இவர்கள் வகுத்த சட்டத்திட்ட புத்தகம், ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 1950 ஆம் ஆண்டு முறைப்படி இந்தியாவின் சட்டப்புத்தகமாக நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இந்தியாவின் முதன்முதல் குடியரசு தலைவராக இராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இனி, இந்திய சட்டப்புத்தகத்தைப் பற்றிய சில திகைப்பான தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்....
இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியானப் புராணக் கதைகள்!!!

கையால் எழுதப்பட்டது
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கையால் எழுதப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதிப்புகளும் ஹீலியம் நிரப்பப்பட்ட பைகளில் மிக பத்திரமாக பாராளுமன்றத்தின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மிகப்பெரிய சட்டப்புத்தகம்
உலகிலேயே இந்தியாவின் சட்டப்புத்தகம் தான் இரண்டாவது பெரிய சட்டப்புத்தகம் ஆகும். முதல் இடத்தில், அயர்லாந்து சட்டப்புத்தகம் இருக்கிறது.

நல்ல சகுனம்
இந்திய சட்டப்புத்தகம் கையெழுத்தான பொழுது மழை பொழிந்ததாம். அன்றைய தினம், இதை நல்ல சகுனமாகக் கருதி அனைவரும் மகிழ்ந்தனர்.

ஏறத்தாழ மூன்று வருடங்கள்
இந்திய சட்டப்புத்தகத்தை எழுதி முடிக்க, ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகின. சரியாக கூறினால், இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினேழு நாட்கள்.

உலகின் சிறந்த சட்டப்புத்தகம்
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சட்டப்புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவின் சட்டப்புத்தகம் தான் சிறந்தது என்று ஒருமனதாகக் கூறப்பட்டிருக்கிறது.

284 கையொப்பங்கள்
ஜனவரி 24,1950 ஆம் நாள் 284 நபர்களால் கைய்யொப்பமிடப்பட்டு அங்கீகரித்து, பின் இரண்டு நாள் கழித்து நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசின் சட்டப்புத்தகம்.

பிரிட்டிஷ்ஷை தழுவியது
இந்தியாவின் சட்டப்புத்தகமும், பிரிட்டிஷின் சட்டப்புத்தகமும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. ஏனெனில், நமது சட்டப்புத்தகம் அவர்களுடையதை தழுவி எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











