Just In
- 4 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 59 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
Don't Miss
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- News விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Movies அச்சச்சோ.. தளபதி விஜய்க்கு என்ன ஆச்சு.. கை விரலை கவனிச்சீங்களா?.. ஓட்டுப் போடும் போது சிக்கிடுச்சே!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்திய சட்டப்புத்தகத்தைப் பற்றிய சில திகைப்பான தகவல்கள்!!!
1947 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் நாள், அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் பீ. இரா. அம்பேத்கர் (தலைமை), கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்தியாவின் "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில அரிய தகவல்கள்!!!
இவர்கள் வகுத்த சட்டத்திட்ட புத்தகம், ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 1950 ஆம் ஆண்டு முறைப்படி இந்தியாவின் சட்டப்புத்தகமாக நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இந்தியாவின் முதன்முதல் குடியரசு தலைவராக இராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இனி, இந்திய சட்டப்புத்தகத்தைப் பற்றிய சில திகைப்பான தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்....
இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியானப் புராணக் கதைகள்!!!
கையால் எழுதப்பட்டது
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்புத்தகம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கையால் எழுதப்பட்டுள்ளது. இந்த இரண்டு பதிப்புகளும் ஹீலியம் நிரப்பப்பட்ட பைகளில் மிக பத்திரமாக பாராளுமன்றத்தின் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மிகப்பெரிய சட்டப்புத்தகம்
உலகிலேயே இந்தியாவின் சட்டப்புத்தகம் தான் இரண்டாவது பெரிய சட்டப்புத்தகம் ஆகும். முதல் இடத்தில், அயர்லாந்து சட்டப்புத்தகம் இருக்கிறது.
நல்ல சகுனம்
இந்திய சட்டப்புத்தகம் கையெழுத்தான பொழுது மழை பொழிந்ததாம். அன்றைய தினம், இதை நல்ல சகுனமாகக் கருதி அனைவரும் மகிழ்ந்தனர்.
ஏறத்தாழ மூன்று வருடங்கள்
இந்திய சட்டப்புத்தகத்தை எழுதி முடிக்க, ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் ஆகின. சரியாக கூறினால், இரண்டு வருடம் பதினோரு மாதம் பதினேழு நாட்கள்.
உலகின் சிறந்த சட்டப்புத்தகம்
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சட்டப்புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தியாவின் சட்டப்புத்தகம் தான் சிறந்தது என்று ஒருமனதாகக் கூறப்பட்டிருக்கிறது.
284 கையொப்பங்கள்
ஜனவரி 24,1950 ஆம் நாள் 284 நபர்களால் கைய்யொப்பமிடப்பட்டு அங்கீகரித்து, பின் இரண்டு நாள் கழித்து நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய அரசின் சட்டப்புத்தகம்.
பிரிட்டிஷ்ஷை தழுவியது
இந்தியாவின் சட்டப்புத்தகமும், பிரிட்டிஷின் சட்டப்புத்தகமும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. ஏனெனில், நமது சட்டப்புத்தகம் அவர்களுடையதை தழுவி எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.