Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
1947 இந்தியா - பாக்., பிரிவின் போது எடுக்கப்பட்ட மனதை உலுக்கும் புகைப்படங்கள்!
1947 இந்தியா - பாக்., பிரிவின் போது எடுக்கப்பட்ட மனதை உலுக்கும் புகைப்படங்கள்!
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் பாகிஸ்தான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா தனி நாடாக சுதந்திரம் பெற்றது.அடிமையாக இருந்த போதிலும் ஒன்றாக இருந்த ஆசியாவின் பெரும் பகுதி, அன்று தனித்தனியாக புரிந்து தனி தேசங்களாக உருவாகின.
இந்த பிரிவினை போது, பாகிஸ்தானில் இருந்த பெரும் பகுதி மக்கள் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்த பெரும்பகுதி மக்கள் பாகிஸ்தானிற்கும் இடமாற்றமாகி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுவரை தாங்கள் வசித்த வீடு, நிலம், உறவுகள், சொந்தங்கள் என அனைத்தையும் பிரிந்து உயிரை ஆங்காங்கே விடுத்து வெற்றுடலாய் இரத்தக் கண்ணீருடன் பயணிக்க துவங்கினர் மக்கள்.

All Image Source and Courtesy: LIFE / indiatvnews / Facebook
இந்த பிரிவினை காரணத்தால் பெருமளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. பலர் இந்த பிரிவினை பயணத்தின் இடையே மரணம் அடைந்தனர். பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகினர். ஏறத்தாழ இடம்பெயர்ந்து செல்ல பயணித்தவர்கள் 1.8 கோடி எனில், அதில் 1.4 - 1.5 கோடி என்ற எண்ணிக்கையிலான மக்கள் தான் உயிருடன் இடம்பெயர்ந்து சென்றனர். மற்ற 35 இலட்சம் பேர் என்ன ஆனார்கள், எங்கு போனார்கள் என்பது விடை தெரியாமல் போனது.
இந்த பிரிவினை தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லுறவு ஏற்படாமல் மனக்கசப்பு உருவாக ஆரம்பப் புள்ளியாக இருந்தது என்றும் கூறலாம்...

#1
புதியதோர் விடியலை தேடி, இலட்சக்கணக்கான மக்கள் மேற்கொண்ட வாழ்க்கை பயணம்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#2
பயணத்தின் நடுவே தங்கள் மகனை இழந்து, அடக்கம் செய்து பயணத்தை தொடரும் இளம் தம்பதி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#3
வீட்டை இழந்து, உறவுகளை இழந்து சோகத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#4
கவலைக்கிடமாக கிடக்கும் தாயின் அருகே செய்வதறியாது தவிக்கும் சிறுமி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#5
கலவரம், உணவு பற்றாக்குறை, உடல் சத்து குறைவு, என பல காரணத்தால் பிரிவினையின் போது இறந்த பலரது உடல் கூட்டாக சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட போது...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#6
பசியில் தாயின் மார் என நினைத்து அவள் அணிந்திருக்கும் சட்டையை உறிஞ்சி பால் தேடும் பச்சிளம் குழந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#7
இறந்த உடல்களை கொத்தி திங்கும் ராஜாளி கழுகுகள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#8
உடல் சோர்வடைந்த தன் மகளை தோள் மீது தூக்கி செல்லும் உடலில் வலுவில்லாத தந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#9
ரயில்வே தண்டவாளத்தின் அருகே சோர்வுற்ற நிலையில் கிடக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#10
அடக்கம் செய்ய ஆளின்றி, புழுதிக் காற்றில் புதைந்துக் கொண்டிருக்கும் உடல்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#11
குளங்களில் தூக்கி வீசப்பட்ட இறந்த உடல்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#12
இடிபாடுகளில் சிதைந்த நிலையில் பகுதி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#13
ஏறத்தாழ மரணத்தின் வாசலில் விழுந்து கிடைக்கும் உயிர்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#14
அறியப்படாத எதிர்காலத்தை நோக்கி, தலைவிதியை நொந்து கொண்டு நகரும் கூட்டம்..
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#15
கூட்டம், கூட்டமாக ரயிலில் அடைத்து ஏற்றி அழைத்து செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#16
வயதான மூதாட்டியை தூக்கி செல்லும் மகன்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#17
இலட்சக்கணக்கான மக்களை ஏதோவொரு நம்பிக்கையில் ஏற்றி செல்லும் வடமேற்கு ரயில்வே தொடர் வண்டி...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#18
பசியின் கொடுமையில் இறந்த முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#19
வயதான தாயை தோளில் சுமந்து செல்லும் மகன்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#20
பயணத்தின் நடுவே இருப்பதை வைத்து தன் குடும்பத்திற்கு சமைத்து கொடுக்கும் தாய்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#21
அருந்த சொட்டு நீர் கூட இன்றி, வாடி கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தை...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#22
சோர்வின் காரணத்தால் மூட்டு வலுவிழந்து கிடக்கும் முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#23
கலவரத்தின் காரணத்தால் சாலைகளில் இறந்து கிடக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#24
புதிய தேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் மக்கள்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#25
தண்டவாளத்தில் உயிரிழந்து கிடக்கும் முதியவர்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook

#26
பிரிவினை காரணத்தால் தன் எதிர்கால நிலையை நினைத்து குழப்பமான சூழலில் இருக்கும் சிறுவன்...
Image Soruce: LIFE / indiatvnews / Facebook



Click it and Unblock the Notifications











