Just In
- 10 min ago கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 1 hr ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- 2 hrs ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 2 hrs ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
Don't Miss
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜீ டீவி சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக ஸ்ரேயா கோஷல்...
ஸ்ரேயா கோஷல், இந்தியாவின் பின்னணி பாடகி ஆவர். குறிப்பாக இவர் இந்தி படங்களில் பல பாடல்கள் பாடி இருக்கிறார்.
ஸ்ரேயா கோஷல், இந்தியாவின் பின்னணி பாடகி ஆவர். குறிப்பாக இவர் இந்தி படங்களில் பல பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், அஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, போன்ற மொழிகளிலும் பல பாடல்கள் பாடியுள்ளார். இவருடைய குரலைக் கேட்டு ரசிகர்கள் மெய் மறந்து இருப்பதை பார்த்திருக்கிறோம்.
4 முறை தேசிய விருது, 6 முறை பிலிம் பேர் விருது, 5 முறை சிறந்த பெண் பின்னணி பாடகி விருது, 9 முறை தென்னிந்திய பிலிம் பேர் விருது, 3 முறை கேரளா மாநில விருது, 2 முறை தமிழ் நாடு மாநில விருது மற்றும் இன்னும் பல விருதுகள் வாங்கி இருக்கிறார்.
ஸ்ரேயா கோஷல்
இவருடைய முதல் குரு இவரின் தாயார். ஸ்ரேயா தன்னுடைய 4 வயதில் இசையைக் கற்கத் தொடங்கினார். அவர்களின் க்ளப் ஆண்டு விழாவில் முதன்முதலாக மேடை ஏறினார். ஸ்ரேயா 6 வயதில் முறைப்படி ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை பயிலத் தொடங்கினார். பின்னாட்களில், பின்னணி இசையில் பாடுவதற்கான பயிற்சியை பத்மஸ்ரீ லேட்.திரு.கல்யாண்ஜி அவர்களிடம் கற்றுக் கொண்டார். பிறகு அவர் மும்பைக்கு குடியேறினார். அதன் பிறகு லேட்.முக்தா பீதேஜி அவர்களிடம் பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார்.
1995ம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற அகில இந்திய குரலிசைப் போட்டியில் வெற்றி பெற்றார்.
ஜீ டீவி சரிகமப
ஸ்ரேயா கோஷலின் முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி EL தொலைக்காட்சியில் "ஆவாஸ் நயி அந்தாஸ் வோஹி" என்ற நிகழ்ச்சி ஆகும். ஸ்டூடியோ பதிவுகளில் இது அவரது முதல் அனுபவம்
ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பான "ச ரி க ம ப" என்ற இசை நிகழ்ச்சி தான் இவருடைய வாழ்வில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கியது. 75வது குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பகுதியில் அவர் வென்று, அந்த குழந்தைகள் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியிலும் அவரே வென்றார்.
இசைப்பயணம்
ச ரி க ம ப வின் இறுதி போட்டியில் இவர் வென்றதில் இருந்து இவருடைய இசைப் பயணம் தொடங்கியது. முதன் முதலில் "தேவதாஸ்" என்ற திரைப்படத்திற்காக இவர் பாடல் பாடினார். இந்த படத்திற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது, சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம் பேர் விருது, சிறந்த இசைத் திறமைக்கான ஆர் டி பர்மன் பிலிம் பேர் விருது போன்ற விருதுகள் இவருக்கு கிடைத்தது.
போட்டி நடுவர்
அர்ஜித் சிங், ஏ.ஆர்.ரஹ்மான், அடிப் அஸ்லம் மற்றும் மோஹித் சௌஹான் ஆகியோரைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் சாவ்ன் (இந்திய இசை ஸ்ட்ரீமிங் சேவையில்) மிகவும் பிரபலமான கலைஞராக ஸ்ரேயா கோஷல் அறிவிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி "வாய்ஸ் ஆப் இந்தியா - சோட்டே உஸ்தாத்" என்ற நிகழ்ச்சியில் ஒரு காலத்தில் போட்டியாளராக இருந்தவர், பிற்காலத்தில் நீதிபதியாக வந்து சாதனை படைத்தார்.
தேசிய விருதுகள்
பாலிவுட்டில் 26 வயதில் நான்கு முறை தேசிய விருது பெற்ற ஒரே கலைஞர் ஸ்ரேயா கோஷல் ஆவார். பிப்ரவரி 5, 2015ம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் தோழரான ஷீலாதித்யா முக்ஹோபாத்யாய் என்பவரை மணமுடித்தார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.