Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
கைத்தறி சேலைக் கட்டி 42 கி.மீ மராத்தான் ஓடி அசத்திய பெண்!
ஐதராபாத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி அசத்தியுள்ளார்.
சில நேரங்களில் சில மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கான வேலைகள், ப்ரமோஷன் ஆகியவை அவுட் ஆப் தி பாக்ஸாக இருக்க வேண்டும். அப்போது தான் அது எந்த வகையில் சிறந்தது, வேறுப்பட்டது என காண்பிக்க முடியும்.
ஐதராபாத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் கைத்தறி சேலையை ஊக்குவிக்க அதை கட்டிக்கொண்டு மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி அசத்தியுள்ளார்.
இன்றைய சூழலில் சேலை கட்டிக் கொண்டு நாள் முழுக்க வேலை செய்வது அல்லது ஒரு இடத்திற்கு சென்று வருவதே கடினமாக இருக்கும் போது, மராத்தான் ஓடுவது எல்லாம் அவ்வளவு எளிதல்ல. அதுவும் 42 கிலோ மீட்டர்.

இந்தியாவின் மாபெரும் மராத்தான்!
இது தான் இந்தியாவின் இரண்டாவது மாபெரும் மராத்தான். இது ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயந்தி!
அனைவரும் ட்ராக்ஸ், ரன்னிங் ஷூட் உடை அணிந்திருந்த போது, அந்த கூட்டத்தில் ஜெயந்தி மட்டும் அனைவரின் பார்வையையும் ஈர்த்தார். காரணம், அவர் மராத்தான் ஓட வந்தது கைத்தறி சேலை கட்டிக்கொண்டு.
42 கிலோ மீட்டர் தூரத்தை கைத்தறி சேலை கட்டிக் கொண்டு ஓடி கடந்து சாதனை படைத்துள்ளார் ஜெயந்தி சம்பத் குமார்.

காரணம்!
கைத்தறி சேலை கட்டிக்கொண்டு இந்த மராத்தானில் ஓடியதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார் ஜெயந்தி. ஜெயந்தி ஒரு சைக்கிளிஸ்ட், இவர் பிளாஸ்டிக் பயன்பாடு சார்ந்து சுற்றுப்புற சூழல் சீர்கேட்டை எதிர்க்க, இதில் இருந்து சுற்றுப்புற சூழலை காக்க இவ்வாறு சேலைக் கட்டிக் கொண்டு ஓடியுள்ளார்.
மேலும், ஜெயந்தி கட்டியிருந்த சேலை பிளாஸ்டிக் கொண்டு கைத்தறியில் உருவாக்கப்பட்ட சேலை ஆகும்.

தனிமனிஷி அல்ல!
27 வயதான உதய் பாஸ்கர் என்பவரும் இதே மராத்தானில் பங்கேற்றார். இவர் வேஷ்டி அணிந்து ஜெயந்தியுடன் இந்த கைத்தறி பயணத்தை ஊக்குவிக்க மராத்தானில் ஓடினார்.

கின்னஸ் சாதனை!
ஜெயந்தியிடம் இதை கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்க, ஏற்கனவே கூறிவிட்டோம். அவர்களது பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் கொடுக்கும் சர்டிபிகேட் மற்றும் ஆதாரங்கள் ஒப்படைக்க வேண்டி காத்திருக்கிறோம் என ஜெயந்தி பதில் கூறியிருக்கிறார்.
மேலும், தனது கோச் மருத்துவர் விஞன் அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஜெயந்தி.

முன்னுதாரணம்!
ஜெயந்தி பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார். மேலும், பெண்கள் நமது கலாச்சார உடையை அசௌகரியமாக உணரக் கூடாது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
வெறும் காலில் ஓட தான் முதலில் திட்டமிட்டதாகவும். ஆனால், பாதியில் இருக்கும் கற்கள் மூலமாக காயம் உண்டாகும் என எண்ணத்தை மாற்றி கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
All Images Source: Reuters



Click it and Unblock the Notifications