Latest Updates
-
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க!
பெண் மனித குரங்கை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த பெண்மணி!
சிங்கம், புலி பசிக்காக வேட்டையாடுமே தவிர, இச்சைக்காக வேறு எந்த விலங்கையும் தேடாது. ஆனால், மனிதன் மட்டுமே செக்ஸ் வைத்துக் கொள்ளவும் விலங்குகளை பயன்படுத்தி கொள்கிறான்.
மனிதர்கலாகிய நாம் குரங்கு, நாய், சிங்கம், புலியை விலங்குகள், மிருகங்கள் என கூறி கொடூரமானவை என வகை பிரித்து வைத்துள்ளோம். ஆனால், உலகிலேயே கொடூரமான விலங்கு மனிதன் தான் என்பதை மனிதர்களே மறுக்க முடியாது என்பது தான் உண்மை.
சிங்கம், புலி பசிக்காக பிற விலங்குகளை வேட்டையாடுமே தவிர, இச்சைக்காக வேறு எந்த விலங்கையும் தேடாது. ஆனால், மனிதன் மட்டுமே செக்ஸ் வைத்துக் கொள்ளவும் விலங்குகளை பயன்படுத்தி கொள்கிறான்.
இது பரிதாபத்திற்குரிய ஒரு பெண் மனித குரங்கின் வாழ்க்கை...

போனி!
போனியை, போர்னியோ மனித குரங்கு பாதுகாப்பு பவுண்டேஷன் அந்த கிராமத்திற்கு சென்று காப்பாற்றி வர எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், லோக்கல் ஆட்கள், தாங்கள் போனி மீது அதிக அன்பு கொண்டுள்ளதாக கூறி அதை கொடுக்க மறுத்தனர். பவுண்டேஷன் ஆட்கள் வனத்துறை உதவி நாடியும் எந்த பயனும் அளிக்கவில்லை.
Image Source

மனிதர்களின் மிருக முகம்!
ஆனால், போனி மீது அவர்கள் வைத்திருந்தது காதல் அல்ல, காமம். போர்னியோவின் ஒரு சிறிய கிராமத்தில் போனி வாழ்ந்து வந்தது. காட்டில் இருந்து போனியே கடத்தி சென்றனர் என்பதே உண்மை. அங்கே மேடம் என அழைக்கப்படும் ஒரு பெண் போனியே வைத்து விபச்சாரம் செய்து வந்தார், பணத்திற்காக.
Image Source

வருமானம்!
மேடம் எனும் அந்த பெண்மணியின் வருமானத்தின் பெருமளவிற்கு காரணமாக இருந்தது போனிதான். அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், போனியுடன் செக்ஸில் ஈடுபட அதிகளவில் பணம் கொடுத்து வந்தனர். ஒன்றும் அறியாத போனி, ஆண்கள் வந்தால் திரும்பி நின்றுக் கொண்டு, தன்னை தானே அவர்களுக்காக ஒத்துழைத்து கொண்டது.

ஷேவ்!
மேடம், போனியின் உடல் சரும முடிகளை ஷேவிங் செய்வதை அன்றாட வேலையாக வைத்திருந்துள்ளார். இதனால் போனி மிகவும் ஈர்ப்பாக தெரியும் என்பது மேடத்தின் கண்ணோட்டம். இதனால் மேடத்திற்கு கிடைத்தது பணம், போனிக்கு கிடைத்தது சரும பிரச்சனைகள். அதிகமாக கொசுக்கடி தொல்லையால் போனி அவதிக்குள்ளானது.
Image Source

மக்கள் தொல்லை!
போனி மேடத்திற்கு லாட்டரி சீட்டு எடுத்துக் கொடுக்க உதவுகிறது. அது லக்கி சார்ம் என கூறி, போலீஸ் வரும் போதெல்லாம் கிராம மக்கள் கத்தி காட்டி மிரட்டி வந்தனர். கடைசியாக விலங்குகள் உரிமை குழுவுடன், 35 போலீஸ் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் ஏந்தி சென்று போனியே காத்து வந்துள்ளனர்.
Image Source

7 வயது குழந்தை!
2003-ல் போனி காப்பற்றப்பட்ட போது 6-7 வயது தான் இருக்கும். ஆனால், எத்தனை ஆண்டுகள் போனி அடிமையாக இருந்தது என தெரியவில்லை. போனி மற்ற மனித குரங்குகள் போல் இல்லாமல் போனது. காப்பாற்றிய பிறகும் மரத்தில் ஏறாது, கீழே தரையில் தான் படுத்துக் கொள்ளும். பிறகு போனி ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Image Source

பத்து ஆண்டுகள்!
பத்து ஆண்டுகள் போனியே காட்டுக்குள் அனுப்பும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. கடைசியாக 2013-ல் அதன் திறன்களுடன் போனி கட்டுக்குள் பத்திரமாக அனுப்பப்படாது. போனி காப்பற்றப்பட்ட நிகழ்வு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. அப்போது அந்த மேடம், என் குழந்தையை எடுத்து செல்கிறார்கள், இது நியாயம் அல்ல என கதறி அழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்தோனேசியா!
போனியே காட்டிலும் அதிகமாக குழந்தைகள் இந்தோனேசியாவில் செக்ஸ் அடிமைகளாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். 2005ல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில் ஒவ்வொரு வருடமும் 10,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்தோனேசியாவில் செக்ஸ் அடிமைகளாக சிக்குகின்றனர். இவர்களில் மூன்றில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்பட்டிருந்தது.
நன்றி இருப்பதால் தான் நாய், ஒற்றுமை இருப்பதால் தான் காகம். மனிதநேயம் இருந்தால் தான் மனிதர்கள். நாம் மனிதர்களா?



Click it and Unblock the Notifications