Just In
- 15 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 3 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏன் வலம்புரி சங்கை உங்க பூஜையறையில் வைக்கனும் தெரியுமா?
தொழில், செல்வம் விருத்தியாக உங்கள் பூஜையறையில் வலபம்புரி சங்கை ஏன் வைக்க வேண்டும் என இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமிர்தத்தைப் பருக, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, வெளிவந்த பதினாறு வகை தெய்வீகத்தன்மைமிக்க பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று என நாம் இதிகாசக் கதைகளில் படித்திருப்போம்.
பாற்கடலில் வாசம் செய்யும் பெருமாளின் இடக்கரத்தில் வலம்புரிசங்கு இருப்பதாக புராணங்களில் படித்து அறிந்திருப்போம். வெற்றியின் அடையாளமாக கிருஷ்ண பரமாத்மா பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஊதியதையும் நாம் அறிந்திருப்போம்.
அதேபோல பஞ்சபாண்டவர்கள் ஐந்துவகை சங்கை உபயோகித்ததாக நாம் படித்திருந்தாலும், அனைத்தையும் விட உயர்வாகக் குறிப்பிடும் வலம்புரி சங்கின் பயன்கள் அறிவோமா!?
சங்கின் ஆன்மீக பயன்பாடு
அமிர்தத்தைப் பருக, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தபோது, வெளிவந்த பதினாறு வகை தெய்வீகத்தன்மைமிக்க பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று என நாம் இதிகாசக் கதைகளில் படித்திருப்போம்.
பாற்கடலில் வாசம் செய்யும் பெருமாளின் இடக்கரத்தில் வலம்புரிசங்கு இருப்பதாக புராணங்களில் படித்து அறிந்திருப்போம்.
வெற்றியின் அடையாளமாக கிருஷ்ண பரமாத்மா பாஞ்சஜன்யம் எனும் சங்கை ஊதியதையும் நாம் அறிந்திருப்போம்.
அதேபோல, பஞ்சபாண்டவர்கள் ஐந்துவகை சங்கை உபயோகித்ததாக நாம் படித்திருந்தாலும், அனைத்தையும் விட உயர்வாகக் குறிப்பிடும் வலம்புரி சங்கின் பயன்கள் அறிவோமா!?
வலம்புரி சங்கின் மகத்துவம்.
சங்கின் வாய்ப்பகுதியில் ஆரம்பித்து சங்கின் சுருள் அமைப்பு, வலப்புறமாக சுற்றி, சங்கின் அடிப்பகுதியில் முடியும் வகையிலான சங்கே, வலம்புரி சங்கு எனப்படுகிறது. வலம்புரி சங்கை காதில் வைக்க, "ஓம்" என்ற பிரணவ சப்தம் வரும்.
தோஷம் :
வலம்புரி சங்கை வீட்டில் முறையாக பூஜித்துவந்தால், அஷ்ட ஐஸ்வர்யத்தையும் தரும் மகாலக்ஷ்மி நம் வீட்டில் வாசம் செய்வாள் என்று வேதங்கள் கூறுகின்றன. மேலும் வலம்புரி சங்கை வழிவிட, பிரம்மஹத்தி தோஷம் எனும் கடுமையான தோஷமும் விலகிவிடுகிறதாக, புராணங்கள் கூறுகின்றன.
வாஸ்து :
வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளில் பாதிப்புகள் நீங்க, சங்கில் மஞ்சள், துளசி கலந்த நீரை, காலை வேளைகளில் வீடுகளில் தெளித்துவர, விரைவில் பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.
வியாபார விருத்தி :
தற்காலத்தில், சில வணிகத்தலங்களில், வணிகம் செழிக்க, சங்கை வைத்து பூஜிக்கின்றனர்.
பழங்காலங்களில், புதிதாக கட்டிய வீடுகளில் சங்கை வைத்து, ஒரு மண்டலம் எனும் 48 நாட்கள் பூஜித்து, சங்கு பூஜை செய்து, வீட்டில் அனைத்து வகை செல்வங்களும் நிறைந்து, வளமுடனும் நலமுடனும் வாழ்ந்தார்கள் என்ற ஆன்மீகப்பெரியோர்களின் வாக்கால், இக்காலத்திலும் சிலர் சங்கு பூஜை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவன் கோவிலில் :
அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு, தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், நூற்று எட்டு, ஆயிரத்து எட்டு என்ற சங்குகளின் எண்ணிக்கையில், அனைத்து சிவன் கோவில்களிலும், சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.