Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
செல்வம் பெருக, கேட்கும் வரம் கிடைத்திட இந்த ஐப்பசி மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள்!!
ஐப்பசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் முருகன், ஐய்யப்பன் என கொண்டாடுவதற்கான சிறப்பான விழாக்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ஐப்பசி மாதம் தமிழ் காலண்டர் கணக்குப்படி ஏழாவது மாதமாக வருகிறது. இது இந்த ஆண்டு அக்டோபர் 18 ல் தொடங்கி நவம்பர் 16 ல் முடிவடைகிறது. இந்த மாதத்தில் தான் நிறைய பண்டிகைகளும் விரதங்களும் கொண்டாடப்படுகின்றன. மேலும் இம்மாதம் அடை மழைக்காலம் என்றும் கூறுவர்.
இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய பூஜைகளும் பரிகாரங்களையும் முழு மனதோடு பக்தியுடன் செய்து வந்தால், நமது வீட்டிற்கு எல்லாவிதத்தில் சுபிக்ஷங்களும், நன்மைகளும் கிடைக்கும்.

பௌர்ணமி
ஐப்பசி பெளர்ணமியில் எல்லா சிவன் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமான் சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் எம்பெருமான் அருளும் நமக்கு கிடைக்கப் பெறுகிறது.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் நடந்த அன்னாபிஷேக படத்தை கீழே காணலாம்.

கோஜாக்ரா விரதம்
வங்காளி மக்கள் இந்த ஐப்பசி மாதத்தில் கோஜாக்ரா என்ற விரதத்தை கடைபிடிக்கின்றனர். கோஜாக்ரா என்ற வார்த்தைக்கு யார் விழித்திருக்கிறீர்கள் என்று பொருள். திருமணம் ஆகாத கன்னி பெண்கள் மற்றும் புதியதாக திருமணம் ஆன பெண்களும் இந்த விரதத்தின் போது இரவு முழுவதும் விழித்திருந்து வெறும் இளநீர் தண்ணீரை மட்டும் குடித்து விரதமிருந்து லஷ்மி தேவியை வணங்கி வழிபடுவர். அப்படி வழிபடுபவர்களுக்கு லட்சுமி தேவி வாரி வாரி வரங்களை அள்ளித் தருவாளாம்.
ஐப்பசி மாதம் வருகின்ற பெளர்ணமியில் இந்த விரதத்தை கடைபிடிக்கும் போது திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வரன்கள் வீடு தேடி வரும். சுமங்கலி பெண்களின் கணவர்கள் நீண்ட ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் சீறும் சிறப்புமாக இருப்பர். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் செல்வம் கொழிக்கும். அம்பாள் பார்வதி தேவி இந்த உலகம் உயிர்கள் மட்டுமில்லாமல் கடவுள் எம்பெருமான் சிவனுக்கே அன்னத்தை வழங்கி அன்னபூரணியாக காட்சியளித்தால் அதனால் தான் இந்த ஐப்பசி மாதம் எல்லா சிவன் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விரதம்
தீபாவளி முடிந்ததும் கந்த சஷ்டி விரதம் தொடங்கி விடும். இந்த விரதத்தின் முதல் நாள் தீபாவளி அமாவாசைக்கு அடுத்து ஆரம்பித்து ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.
கடவுள் முருகப் பெருமான் சூரபத்மனை அழிக்கும் ஆறாவது நாள் தான் சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கோயில்களிலும் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததை கொண்டாடினாலும் திருச்செந்தூர் கோயிலில் இந்த சம்ஹார நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. இந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும், குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மாதம் சஷ்டி விரதம் அக்டோபர் 25 ல் வருகிறது.

ஐப்பசி சதயம்
இந்த ஐப்பசி மாதம் சதய நாளில் தான் தமிழ் நாட்டை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த மன்னர் ராஜ ராஜ சோழன் பிறந்தார். இந்த வருட கணக்கின் படி பார்த்தால் தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிறது.
இந்த வருடம் நவம்பர் 15 ல் ஐப்பசி சதயம் வருகிறது.

வளர்பிறை ஏகாதசி
ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், நோய்கள் நம்மளை அண்டாது, பசிப்பிணி நீங்கும், மன நிம்மதி கிடைக்கும் மற்றும் பாவ விமோச்சனம் பெறலாம்.
இந்த ஏகாதசி இந்த வருடம் ஐப்பசி 14 ல் வருகிறது

தேய்பிறை ஏகாதசி
ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "இந்திரா ஏகாதசி "என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் இந்திர வாழ்வை வைகுண்டத்தில் பெறுவர். ஐப்பசி மாத ஏகாதசியன்று பால் சாப்பிடக் கூடாது
இந்த ஏகாதசி இந்த வருடம் ஐப்பசி 28 ல் வருகிறது.

கடைமுகம்
ஐப்பசி மாதக் கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் புனித காவேரி நதியில் நீராடுவது நல்லது. இந்த மாதத்தில் காவேரி கங்கையாகிறாள். எனவே இம்மாதத்தில் காவேரியில் நீராடினாலயே கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும். இந்த நாள் இந்த வருடம் நவம்பர் 16 ல் வருகிறது.



Click it and Unblock the Notifications











