Just In
- 3 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 6 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 8 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கட்டாயத் திருமணத்தின் காயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய புகைப்படக் கலைஞர்!
காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ... எதுவாக இருந்தாலும் ஒருவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது மனிதத்தன்மையற்ற செயலாகும்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவு என்பார்கள். ஆனால், அது அனைவருக்கும் சொர்க்கமாக அமைகிறதா? அல்லது சொற்பமான நபர்களால் சீரழிந்து போகிறதா? என்பது தான் வாழ்க்கையின் பெரும் திருப்பமே.
காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ... எதுவாக இருந்தாலும் ஒருவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது மனிதத்தன்மையற்ற செயலாகும்.
சில இனத்தினர், சில மதத்தினர் காதலை எதிர்க்கிறோம் என சொந்த பிள்ளையை கட்டாயத் திருமணம் செய்து வைத்து கொன்றுவிடுகிறார்கள்.
கொடுமையின் உச்சமாக திகழும் கட்டாயத் திருமணங்களில் சிக்கி ஒரு பெண் எத்தகைய கொடுமைகளை எல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை தனது புகைப்படங்கள் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் புகைப்பட கலைஞர் ரிதா ஷா!
முகம்!
மூடி இருப்பது முகம் மட்டுமல்ல, எண்ணற்ற உணர்வுகளின் மூட்டைகளும் தான். பிடிக்காத உணவை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டாலே அது எவ்வளவு சிக்கும் என்பது தெரியும்.
ஒரு நொடியில் தொண்டையில் இறங்கிடும் இதற்கு இப்படி என்றால். வாழ்நாள் முழுக்க பிடிக்காத நபருடன் வாழ்ந்து, உணர்வுகளை தொண்டைக்குள் புதைத்து விம்மி, விம்மி அழும் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும்?
கட்டு!
இந்த சமூகம் கட்டாயத் திருமணம் என்ற பெயரில் ஓர் ஆண், பெண்ணை கட்டி வைப்பதில்லை. பெண்ணை மட்டுமே ஒரு மாய சங்கலியில் கட்டி அவளை சமூகத்தில் ஒரு சிறைக்கைதி ஆக்கி அடிமைப் படுத்துகிறது. ஒருவரின் செல்வம், பொருட்களை அழிப்பதை காட்டிலும், கனவு மற்றும் வாழ்க்கையை அழிப்பது பெரும் பாவச் செயல் ஆகும்.
ரிங்!
ரிங்கில் (மோதிரம்) அடங்கி போவது அவள் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையும் தான். ரிங் மாஸ்டர் சொல்வதை கேட்டு, சர்க்கஸில் ஆடும் விலங்குகளை போல தான், அவளும் கணவன் என்ற ரிங் மாஸ்டரின் கட்டளைக்கு இணங்கி அடிமை ஆகி போகிறாள்.
கருத்து!
கட்டாயத் திருமணத்தின் போதே அந்த பெண்ணின் குரல்வளையை நெருக்கிக் விடுகிறார்கள். அதன் பின் அவளது பேச்சுக்கு எங்கே இருக்க போகிறது மதிப்பு. வாயில்லா பூச்சியாக, வெறும் செக்ஸ் பொம்மையாக தான் பல பெண்கள் கட்டாயத் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
தலையாட்டி பொம்மை!
கட்டாயத் திருமணத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் ஆப்ஷன் ஒன்று தான். கூறுவதற்கு தலையாட்ட வேண்டும். இல்லையேல் மடிந்து சாகவேண்டும்.
இந்த நவீன யுகத்தில் இதெல்லாம் எங்கே இருக்கிறது என்பார்கள். மெட்ரோ சிட்டிகள் தவிர்த்து, உலகின் பல பகுதிகளில் இவை இன்னும் கட்டுக்கடங்காமல் தான் இருக்கின்றன.
கண்ணீர்!
அந்த பெண் ஆனந்தத்தில் அழுகிறாளா? சோகத்தில் அழுகிறாளா? என பிரித்து பார்க்கும் அறிவும், அறிய நேரமும் கட்டாயப் படுத்தி திருமணம் முடித்த கணவர்களுக்கு இருப்பதில்லை.
சில பெண்களின் சிறகுகளை ஒடிக்கிறார்கள். சில பெண்களை சிறையில் அடைக்கிறார்கள். ஆகமொத்தம் இன்றளவிலும் பெண்ணடிமைத்தனம் உலகில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதே நிஜம்!
All Image Courtesy:Rida Shah's Photography