Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...!
தண்ணீருக்காக பல திருமணம் செய்யும் வினோதமான மகாராஷ்டிரா கிராமம்!
தண்ணீர் எடுத்து வருவதற்காகவே பெண்களை திருமணம் செய்யும் முறை கொண்டுள்ள மகாராஷ்டிரா கிராமம் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
தென்கன்மல் (Denganmal), மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு கிராமம். மும்பையில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். இக்கிராமத்திம் மொத்தமே 500 பேர் தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்வது குற்றம் என இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. விவாகரத்து அல்லது இறப்பு நேரிடும் போது மறுதிருமணம் செய்துக் கொள்ளலாம்.
ஆனால், தென்கன்மல் கிராமத்தில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

என்ன காரணம்?
இரண்டு மூன்று திருமணம் செய்தாலும் கூட, அந்த பெண்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர். இவர்கள் இப்படி பல திருமணம் செய்வதற்கு காரணம் தண்ணீர் என்றால் நம்ப முடிகிறதா?
நம்பி தான் ஆகவேண்டும். குடும்பத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வருவதற்காகவே இவர்கள் இரண்டு மூன்று திருமணம் செய்கின்றனர். இவர்களை "தி வாட்டர் வைப்" என அழைக்கின்றனர்.
Image Source

வறட்சி!
மகாராஷ்டிராவில் மட்டுமின்றி, இந்தியாவின் பல கிராமங்களில் வறட்சி நிலவுகிறது. அதில் தென்கன்மல் கிராமமும் ஒன்று. ஆனால், இவர்கள் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்றால் பல மைல் தூரம் கடந்து எடுத்துவர வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.

கோடை கொடுமை!
தென்கன்மல் கிராமத்தில் கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும். கிணறுகள் முற்றிலும் வற்றிவிடும். கால்நடைகள் வறட்சி தாங்காமல் இறந்துவிடும். இதற்கெல்லாம் மேலாக இந்த கிராமம் மற்ற கிராமங்களுடன் இணைப்பு இல்லாமல், தனித்து இருக்கிறது.
எனவே, கிணறுகள் கோடைகாலத்தில் வற்றிவிட்டால், இவர்கள் பல மைல் கடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழலை சந்திக்க நேரிடுகிறது. ஏறத்தாழ இவர்கள் 15 லிட்டர் தண்ணீர் எடுத்துவர 12 மணிநேரம் செலவிட வேண்டியிருக்கிறது.

சகாராம் பகத்!
சகாராம் பகத் என்பவருக்கு முதல் மனைவி மூலமாக ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது முதல் மனைவிக்கு வீட்டை பாதுகாக்கவும், குழந்தைகளை காக்கவுமே நேரம் சரியாக போய்விடுகிறது.
இது தவிர ஒரு நாள் செலவு செய்து தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை ஏற்படுவதால், சகாராம் பகத் வீட்டுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வரவே இரண்டு திருமணம் செய்துள்ளார்.

அநியாயத்தின் உச்சக்கட்டம்!
இந்த கொடுமை இந்த கிராமம் மட்டுமின்றி, இந்தியாவின் வேறுசில கிராமங்களிலும் நடந்து வருகிறது. இது அநியாயத்தின் உச்சக்கட்டம் அல்லவா. ஒரு பெண் என்பவள் பெரும் சக்தி. அவளை ஒரு குடம் தண்ணீர் மட்டும் எடுத்து வருவதற்காக திருமணம் செய்வது முற்றிலும் தவறான செயற்முறை அல்லவா.
எத்தனையோ திட்டங்கள், எத்தனையோ மாற்றங்கள் இந்நாட்டில் வந்து சென்றாலும், அடித்தட்டி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை, அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு தீர்வு மட்டும் தட்டிக்கழிக்கப்பட்டே வருகின்றன.



Click it and Unblock the Notifications











