Just In
- just now கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 43 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியா மட்டுமல்ல, ரோம், மொரோக்கோ, ஃபிரான்ஸ் நாடுகளிலும் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?
நமது ஊர்களில் திடீரென முளைத்த சில காளான்கள் நாம் பாரம்பரியமாக பின்பற்றி வரும் சில கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் முட்டாள்தனம், கிறுக்குத்தனம் என கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் பலரும் திருமணத்தின் போது ஏன் அரிசி தூவி அட்சதை போட்டு வாழ்த்துக்கின்றனர். இது ஏன் என கேள்விகள் எழுப்புவார்கள். இந்த பழக்கம் நமது ஊர்களில் மட்டுமல்ல, ரோம், ஃபிரான்ஸ், மொரோக்கோ போன்ற பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.
சிலர் அரிசி, சிலர் கோதுமை தூவும் பழக்கம் கொண்டு இருந்துள்ளனர். இதை தூவுவதற்கு பெரும்பாலும் அனைவரும் கூறியுள்ள காரணம் மணமக்கள் எல்லா வளமும் பெற்றி இன்பமாக இருக்க வேண்டும் என்பது தான்...
பண்டைய ரோம்!
பண்டைய ரோம் பாரம்பரியத்தில் தான் இப்படி அட்சதை போல தூவி மணமக்களை வாழ்த்தும் வழக்கம் ஆரம்பித்தது என கூறப்படுகிறது. ரோமர்கள் அப்போது அரிசிக்கு பதிலாக கோதுமை நெல் தூவி வாழ்த்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.
இப்படி கோதுமை நெல் தூவி வாழ்த்துவதால், அந்த புதுமண தம்பதிகள் எல்லா நன்மைகளும், பிள்ளைகள் மற்றும் எல்லா வளம் பெற்று வாழ்வார்கள் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.
இந்திய முறை!
நமது இந்திய கலாச்சாரத்தில் திருமணத்தின் போது மணமகன், மணமகளுக்கு தாளிக்கட்டும் போது, கெட்டி மேளம் கொட்டும் போது மஞ்சள் கலந்த அரிசியை மணமக்கள் மீது தூவி 16 செல்வங்கள் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துவர். இதுவும் ஏறத்தாழ ரோமர்களின் வாழ்த்து போன்றது தான்.
மொரோக்கோ!
மொரோக்கோ பாரம்பரியத்தில் புதுமண தம்பதிகளின் வாழ்க்கை இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக திராட்சை மற்றும் அத்திப்பழம் போன்றவற்றை தூவி வாழ்த்தும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஃபிரான்ஸ்!
ஃபிரான்ஸ் நாட்டு பாரம்பரியத்தில் மணமக்கள் மீது நெல் வீசி வாழ்த்தும் முறையை பின்பற்றி வருகின்றனர்.
இத்தாலி!
இத்தாலி பாரம்பரியத்தில் நட்ஸ் மற்றும் கேண்டீஸ் தூவி வாழ்த்துகின்றனர். மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் முட்டையை வீசும் வினோத வழக்கம் கொண்டுள்ளனர்.
மாற்றங்கள்!
ஆனால், இப்போது பல மாற்றங்கள் வந்துவிட்டன, நமது ஊர்களில் அட்சதைக்கு பதிலாக ரோஜா இதழ்கள் சிலர் தூவுகின்றனர்.
அதே போல ஆங்கில வழி திருமணங்களில் பபிள்கள் (bubbles) ஊதுவது, மலர்கள் தூவுவது என பல மாற்றங்களை கொண்டுவந்துவிட்டனர்.