Latest Updates
-
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்தியா மட்டுமல்ல, ரோம், மொரோக்கோ, ஃபிரான்ஸ் நாடுகளிலும் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?
நமது ஊர்களில் திடீரென முளைத்த சில காளான்கள் நாம் பாரம்பரியமாக பின்பற்றி வரும் சில கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் முட்டாள்தனம், கிறுக்குத்தனம் என கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் பலரும் திருமணத்தின் போது ஏன் அரிசி தூவி அட்சதை போட்டு வாழ்த்துக்கின்றனர். இது ஏன் என கேள்விகள் எழுப்புவார்கள். இந்த பழக்கம் நமது ஊர்களில் மட்டுமல்ல, ரோம், ஃபிரான்ஸ், மொரோக்கோ போன்ற பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.
சிலர் அரிசி, சிலர் கோதுமை தூவும் பழக்கம் கொண்டு இருந்துள்ளனர். இதை தூவுவதற்கு பெரும்பாலும் அனைவரும் கூறியுள்ள காரணம் மணமக்கள் எல்லா வளமும் பெற்றி இன்பமாக இருக்க வேண்டும் என்பது தான்...

பண்டைய ரோம்!
பண்டைய ரோம் பாரம்பரியத்தில் தான் இப்படி அட்சதை போல தூவி மணமக்களை வாழ்த்தும் வழக்கம் ஆரம்பித்தது என கூறப்படுகிறது. ரோமர்கள் அப்போது அரிசிக்கு பதிலாக கோதுமை நெல் தூவி வாழ்த்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.
இப்படி கோதுமை நெல் தூவி வாழ்த்துவதால், அந்த புதுமண தம்பதிகள் எல்லா நன்மைகளும், பிள்ளைகள் மற்றும் எல்லா வளம் பெற்று வாழ்வார்கள் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.

இந்திய முறை!
நமது இந்திய கலாச்சாரத்தில் திருமணத்தின் போது மணமகன், மணமகளுக்கு தாளிக்கட்டும் போது, கெட்டி மேளம் கொட்டும் போது மஞ்சள் கலந்த அரிசியை மணமக்கள் மீது தூவி 16 செல்வங்கள் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துவர். இதுவும் ஏறத்தாழ ரோமர்களின் வாழ்த்து போன்றது தான்.

மொரோக்கோ!
மொரோக்கோ பாரம்பரியத்தில் புதுமண தம்பதிகளின் வாழ்க்கை இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக திராட்சை மற்றும் அத்திப்பழம் போன்றவற்றை தூவி வாழ்த்தும் வழக்கம் கொண்டுள்ளனர்.

ஃபிரான்ஸ்!
ஃபிரான்ஸ் நாட்டு பாரம்பரியத்தில் மணமக்கள் மீது நெல் வீசி வாழ்த்தும் முறையை பின்பற்றி வருகின்றனர்.

இத்தாலி!
இத்தாலி பாரம்பரியத்தில் நட்ஸ் மற்றும் கேண்டீஸ் தூவி வாழ்த்துகின்றனர். மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் முட்டையை வீசும் வினோத வழக்கம் கொண்டுள்ளனர்.

மாற்றங்கள்!
ஆனால், இப்போது பல மாற்றங்கள் வந்துவிட்டன, நமது ஊர்களில் அட்சதைக்கு பதிலாக ரோஜா இதழ்கள் சிலர் தூவுகின்றனர்.
அதே போல ஆங்கில வழி திருமணங்களில் பபிள்கள் (bubbles) ஊதுவது, மலர்கள் தூவுவது என பல மாற்றங்களை கொண்டுவந்துவிட்டனர்.



Click it and Unblock the Notifications