Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
கிருஷ்ண ஜெயந்தி 2023: உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை வைச்சு கும்புடணும் தெரியுமா? மிஸ் பண்ணிராதீங்க!
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜென்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த நாள் முக்கியத்துவம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் விரதமிருந்து கிருஷ்ணரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்து மத நூல்கள், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் விரதத்தை 'விரதராஜ்' என்று குறிப்பிடுகிறது.

இந்த நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுவது உங்களுக்கு விரும்பிய பலன்களை அளிக்கும். அதிலும் உங்கள் ராசிக்கேற்ற சரியான பொருட்களை வைத்து கிருஷ்ணரை வழிபடுவது உங்களுக்கான பலனை இருமடங்காக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு சர்க்கரை வைத்து வழிபடுவது மிகவும் லாபகரமாக இருக்கும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் மற்றும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களை வழங்குவது மட்டுமல்லாமல், உங்க ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தூய நெய் மற்றும் தயிர் வைத்து கிருஷ்ணரை வழிபடலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவீர்கள், மேலும் தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று இறைவனுக்கு குங்குமப்பூ கலந்த பாலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு சர்க்கரை சேர்க்கப்பட்ட நெய்யில் சேர்க்கப்பட்ட பிரசாதத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இது உங்கள் நற்பெயரை அதிகரிக்கும் மற்றும் உங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு பெற உதவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள், ஜென்மாஷ்டமி அன்று, ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால்கோவாவை பிரசாதமாக வைத்து வழிபடுவது மங்களகரமானது. இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும், எண்ணங்களையும் கொண்டுவரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த நாளில் கிருஷ்ணருக்கு சுத்தமான பசு நெய்யை வைத்து பூஜை செய்வது நல்ல பலன்களை அளிக்கும். இதன் மூலம் அவர்கள் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இறைவனுக்கு பால் வைத்து பூஜை செய்வதுதான் மூலம் கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெறலாம், மேலும் உங்களுக்கு வாழக்கையில் இருக்கும் அனைத்து பணப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற பழங்கள் மற்றும் பசுவின் பால், தயிர், நெய், தேன் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை வைத்து கிருஷ்ணரை வழிபடலாம். இது உங்கள் எதிரிகள் அனைவரையும் வெல்ல உதவும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள், கிருஷ்ணரை கங்கை நீரால் அபிஷேகம் செய்து, இனிப்பு வெற்றிலை சமர்ப்பித்து பூஜிப்பது, உங்களுக்கு நிலையான அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசியைப் பெறுவதற்கு உலர் பழங்கள் மற்றும் சிவப்பு நிற இனிப்புகளை வைத்து பூஜை செய்ய வேண்டும். இது உங்களுக்கு பெரும் புகழை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு தேன், பால், நெய், தயிர், சர்க்கரை மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை தேங்காயுடன் சேர்த்து வைத்து வழிபட்டால் உங்களுக்கு அளவற்ற அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications












