Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
கிருஷ்ண ஜெயந்தி 2023: உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை வைச்சு கும்புடணும் தெரியுமா? மிஸ் பண்ணிராதீங்க!
விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஜென்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த நாள் முக்கியத்துவம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் விரதமிருந்து கிருஷ்ணரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்து மத நூல்கள், ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் விரதத்தை 'விரதராஜ்' என்று குறிப்பிடுகிறது.

இந்த நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுவது உங்களுக்கு விரும்பிய பலன்களை அளிக்கும். அதிலும் உங்கள் ராசிக்கேற்ற சரியான பொருட்களை வைத்து கிருஷ்ணரை வழிபடுவது உங்களுக்கான பலனை இருமடங்காக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு சர்க்கரை வைத்து வழிபடுவது மிகவும் லாபகரமாக இருக்கும். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் மற்றும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களை வழங்குவது மட்டுமல்லாமல், உங்க ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தூய நெய் மற்றும் தயிர் வைத்து கிருஷ்ணரை வழிபடலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவீர்கள், மேலும் தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று இறைவனுக்கு குங்குமப்பூ கலந்த பாலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு சர்க்கரை சேர்க்கப்பட்ட நெய்யில் சேர்க்கப்பட்ட பிரசாதத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இது உங்கள் நற்பெயரை அதிகரிக்கும் மற்றும் உங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு பெற உதவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள், ஜென்மாஷ்டமி அன்று, ஸ்ரீ கிருஷ்ணருக்கு பால்கோவாவை பிரசாதமாக வைத்து வழிபடுவது மங்களகரமானது. இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும், எண்ணங்களையும் கொண்டுவரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த நாளில் கிருஷ்ணருக்கு சுத்தமான பசு நெய்யை வைத்து பூஜை செய்வது நல்ல பலன்களை அளிக்கும். இதன் மூலம் அவர்கள் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இறைவனுக்கு பால் வைத்து பூஜை செய்வதுதான் மூலம் கிருஷ்ணரின் ஆசீர்வாதத்தைப் பெறலாம், மேலும் உங்களுக்கு வாழக்கையில் இருக்கும் அனைத்து பணப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் நிற பழங்கள் மற்றும் பசுவின் பால், தயிர், நெய், தேன் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை வைத்து கிருஷ்ணரை வழிபடலாம். இது உங்கள் எதிரிகள் அனைவரையும் வெல்ல உதவும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள், கிருஷ்ணரை கங்கை நீரால் அபிஷேகம் செய்து, இனிப்பு வெற்றிலை சமர்ப்பித்து பூஜிப்பது, உங்களுக்கு நிலையான அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசியைப் பெறுவதற்கு உலர் பழங்கள் மற்றும் சிவப்பு நிற இனிப்புகளை வைத்து பூஜை செய்ய வேண்டும். இது உங்களுக்கு பெரும் புகழை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு தேன், பால், நெய், தயிர், சர்க்கரை மற்றும் பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை தேங்காயுடன் சேர்த்து வைத்து வழிபட்டால் உங்களுக்கு அளவற்ற அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
