Latest Updates
-
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா?
உணவுகள் மற்றும் காய்கறிகளை மாசக்கணக்கில் கெட்டுப்போகாமல் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும், தற்போது உணவுகள் மற்றும் சமைக்கும் பொருட்களின் ஆயுளை நீட்டிப்பதன் மூலம் உணவின் புத்துணர்ச்சியைத் தக்கவைக்க குளிர்சாதன பெட்டி உதவுகிறது.
ஆனால் குளிர்சாதனப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு உணவுகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவைப் பாதுகாப்பதற்கும் நீண்ட காலத்திற்கு அதன் ஆயுளை நீட்டிப்பதற்கும் பண்டையக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விசித்திர வழிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நொதித்தல்
நொதித்தல் என்பது உணவுகளின் அடுக்கு ஆயுளை நீட்டிப்பதற்கும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு பழமையான வழியாகும். நொதித்தல் செயல்முறை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது, இது பானங்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளைப் பாதுகாக்க உதவுகிறது.
சாம்பல் மற்றும் களிமண் பாதுகாப்பு முறை
பாரம்பரியமாக சாம்பல் மற்றும் களிமண்ணுடன் உணவைப் பாதுகாக்கும் முறை உலர் மீன், மசாலா மற்றும் வேர் காய்கறிகளான உருளைக்கிழங்கு மற்றும் கேரட் போன்ற வேர் காய்கறிகளைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது.
இந்த முறை காய்கறிகள் மற்றும் மீன்களின் ஈரப்பதம், சுவை மற்றும் அமைப்பு ஆகியவற்றை சாம்பல் அல்லது களிமண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாக்க உதவியது, இது காய்கறிகளை காற்று மற்றும் ஒளியிலிருந்து பாதுகாக்கும் தடையை உருவாக்கியது.
உப்பு
உப்பை பயன்படுத்தி உணவை பாதுகாப்பது என்பது உணவுகளின் புத்துணர்ச்சியைத் தக்கவைக்கும் மற்றொரு பாரம்பரிய முறையாகும், இது உணவு மற்றும் பொருட்களில் இருந்து ஈரப்பதத்தை வெளியேற்றுகிறது மற்றும் பல வகையான பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஒரு தடையை உருவாக்குகிறது, இது மீன், இறைச்சி மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளின் ஆயுளை நீட்டிக்க உதவுகிறது.
தேன்
தேன் என்பது ஒரு இயற்கையான பாதுகாப்பை அளிக்கும் பொருளாகும், இது உணவைப் பாதுகாக்கும் பாரம்பரிய வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் குறைந்த நீர் உள்ளடக்கம் மற்றும் அமிலத்தன்மை காரணமாக சில பழங்கள் மற்றும் புதிய காய்கறிகளைப் பாதுகாக்க பயன்படுகிறது. இது தவிர, தேனின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.
உலர வைத்தல்
ஆரம்பகால மற்றும் எளிதான அறியப்பட்ட நடைமுறைகளில் இதுவும் ஒன்றாகும், உலர்த்துதல் என்பது உணவை நீரிழப்பு செய்வதைக் குறிக்கிறது. ஈஸ்ட், பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் உணவைப் பாதுகாக்க உதவும் உணவில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் அகற்றுவதே இதன் நோக்கம்.
சூரியன் மற்றும் காற்று உலர்த்துதல் மிகவும் பிரபலமான செயல்முறைகள் என்றாலும், உலர்த்துதல் டீஹைட்ரேட்டர்கள், ஓவன்கள் மற்றும் மைக்ரோவேவ்களைப் பயன்படுத்தியும் செய்யப்படலாம்.
ஊறுகாய்
உப்பு, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற உணவின் சுவையை அதிகரிக்க கூடுதல் பொருட்களுடன் கூடிய அமிலம், வினிகர், எண்ணெய்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றில் உணவுப்பொருட்களை ஊறவைப்பது பழங்கால செயல்முறையாகும். ஊறுகாய் பல மாதங்கள் எளிதில் கெட்டுப்போகும் உணவைப் பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications
