Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் சுவையாக சமைக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை மறக்காம பாலோ பண்ணுங்க...!
கறிகள் மற்றும் குழம்புகள் இந்திய உணவு வகைகளில் பிரிக்க முடியாத பகுதியாகும், எனவே கெட்டியான, ருசியான குழம்பு இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. ஒவ்வொரு முறையும் கறிகள் மற்றும் குழம்புகளின் சுவை மற்றும் அமைப்பைக் கச்சிதமாகப் பெறுவது மிகவும் சவாலானது என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஒரே விதத்தில் ஒரே டிப்ஸை பின்பற்றினாலும் நாம் சமைக்கும் போது ஒவ்வொரு முறையும் சுவை மாறுபடலாம். ஒவ்வொரு முறையும் சுவையான கிரேவிகள் மற்றும் கறிகளை கச்சிதமாக செய்ய சில சிறந்த எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தண்ணீரை எப்படி சரிசெய்வது?
உங்களின் கிரேவியில் அல்லது குழம்பில் அதிகளவு தண்ணீரை ஊற்றிவிட்டீர்களா? அதனை எப்படி சரிசெய்வது என்று முழிக்கிறீர்களா? இதனை சரிசெய்ய ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் சோள மாவை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்கள் தண்ணீர் அதிகமாக உள்ள குழம்பில் சேர்த்து தொடர்ந்து கிளறவும், இது கறிகளுக்கு அடர்த்தியான அமைப்பை கொடுக்க உதவும்.
சரியான வழிமுறையைப் பின்பற்றுவது
ஒவ்வொரு முறையும் சரியான கிரேவி அல்லது குழம்பை சமைப்பதற்கான எளிதான வழி, செய்முறையை படிப்படியாகப் பின்பற்றுவதாகும், இது ஒரு உணவில் உள்ள சுவைகளை நன்றாக உறிஞ்சி சுவையூட்ட உதவுகிறது. உதாரணமாக, வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்குவது, கறியின் அடிப்பகுதியை வலுவாகவும் நறுமணமாகவும் மாற்றும்.
ப்ரெஷான பொருட்களை உபயோகிக்கவும்
உங்களுக்குப் பிடித்தமான குழம்பை சமைக்க புதிய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் சுவை மற்றும் அமைப்பைப் பெருக்கலாம். ஏனெனில் ப்ரெஷான பொருட்கள் உணவின் அமைப்பு மற்றும் சுவையை அதிகரிக்கும்.
உதாரணமாக நீங்கள் வாசனை நிறைந்த கறிகளை விரும்பினால், கிரேவிகளின் தேவையான அமைப்பு மற்றும் சுவைகளைப் பெற புதிய மசாலா பொருட்களை பயன்படுத்த வேண்டும். அசைவ உணவுகளை சமைக்கும் போது இஞ்சி, பூண்டு விழுதை எப்போதும் ப்ரெஷாக அரைத்து பயன்படுத்த வேண்டும்.
புரோட்டின் உணவு
புரதத்தை சமைப்பதற்கான எளிதான வழி என்னவெனில், சிறந்த அமைப்பு மற்றும் சுவைக்காக கறியில் சேர்ப்பதற்கு முன் அதை வதக்குவது சிறந்தது. கடல் உணவைப் பயன்படுத்தினால், அதிகமாகச் சமைப்பதைத் தடுக்க கடைசியில் அதனை சேர்க்கவ வேண்டும்.
காரத்தை குறைக்க
காரமான அல்லது அதிக மசாலா சேர்க்கப்பட்ட குழம்பை சரிசெய்வதற்கு, சமையலின் முடிவில் தேங்காய்ப்பால், கனமான கிரீம் அல்லது தயிர் போன்ற க்ரீம் பொருட்களைச் சேர்ப்பது காரத்தை குறைத்து கிரீமியான தோற்றத்தை உணவிற்குக் கொடுக்கும். இது மென்மையான அமைப்பையும் உணவிற்குக் கொடுக்கிறது.
மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்கள் அவற்றின் அத்தியாவசிய எண்ணெய்களை வெளியிடுகின்றன மற்றும் கறியின் சுவையை ஆழமாக்குகின்றன. மசாலாப் பொருட்களையும் மூலிகைகளையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம், சுவையான உணவையும் இனிமையான அனுபவத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications












