Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் சுவையாக சமைக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை மறக்காம பாலோ பண்ணுங்க...!
கறிகள் மற்றும் குழம்புகள் இந்திய உணவு வகைகளில் பிரிக்க முடியாத பகுதியாகும், எனவே கெட்டியான, ருசியான குழம்பு இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. ஒவ்வொரு முறையும் கறிகள் மற்றும் குழம்புகளின் சுவை மற்றும் அமைப்பைக் கச்சிதமாகப் பெறுவது மிகவும் சவாலானது என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஒரே விதத்தில் ஒரே டிப்ஸை பின்பற்றினாலும் நாம் சமைக்கும் போது ஒவ்வொரு முறையும் சுவை மாறுபடலாம். ஒவ்வொரு முறையும் சுவையான கிரேவிகள் மற்றும் கறிகளை கச்சிதமாக செய்ய சில சிறந்த எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தண்ணீரை எப்படி சரிசெய்வது?
உங்களின் கிரேவியில் அல்லது குழம்பில் அதிகளவு தண்ணீரை ஊற்றிவிட்டீர்களா? அதனை எப்படி சரிசெய்வது என்று முழிக்கிறீர்களா? இதனை சரிசெய்ய ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் சோள மாவை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்கள் தண்ணீர் அதிகமாக உள்ள குழம்பில் சேர்த்து தொடர்ந்து கிளறவும், இது கறிகளுக்கு அடர்த்தியான அமைப்பை கொடுக்க உதவும்.
சரியான வழிமுறையைப் பின்பற்றுவது
ஒவ்வொரு முறையும் சரியான கிரேவி அல்லது குழம்பை சமைப்பதற்கான எளிதான வழி, செய்முறையை படிப்படியாகப் பின்பற்றுவதாகும், இது ஒரு உணவில் உள்ள சுவைகளை நன்றாக உறிஞ்சி சுவையூட்ட உதவுகிறது. உதாரணமாக, வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்குவது, கறியின் அடிப்பகுதியை வலுவாகவும் நறுமணமாகவும் மாற்றும்.
ப்ரெஷான பொருட்களை உபயோகிக்கவும்
உங்களுக்குப் பிடித்தமான குழம்பை சமைக்க புதிய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் சுவை மற்றும் அமைப்பைப் பெருக்கலாம். ஏனெனில் ப்ரெஷான பொருட்கள் உணவின் அமைப்பு மற்றும் சுவையை அதிகரிக்கும்.
உதாரணமாக நீங்கள் வாசனை நிறைந்த கறிகளை விரும்பினால், கிரேவிகளின் தேவையான அமைப்பு மற்றும் சுவைகளைப் பெற புதிய மசாலா பொருட்களை பயன்படுத்த வேண்டும். அசைவ உணவுகளை சமைக்கும் போது இஞ்சி, பூண்டு விழுதை எப்போதும் ப்ரெஷாக அரைத்து பயன்படுத்த வேண்டும்.
புரோட்டின் உணவு
புரதத்தை சமைப்பதற்கான எளிதான வழி என்னவெனில், சிறந்த அமைப்பு மற்றும் சுவைக்காக கறியில் சேர்ப்பதற்கு முன் அதை வதக்குவது சிறந்தது. கடல் உணவைப் பயன்படுத்தினால், அதிகமாகச் சமைப்பதைத் தடுக்க கடைசியில் அதனை சேர்க்கவ வேண்டும்.
காரத்தை குறைக்க
காரமான அல்லது அதிக மசாலா சேர்க்கப்பட்ட குழம்பை சரிசெய்வதற்கு, சமையலின் முடிவில் தேங்காய்ப்பால், கனமான கிரீம் அல்லது தயிர் போன்ற க்ரீம் பொருட்களைச் சேர்ப்பது காரத்தை குறைத்து கிரீமியான தோற்றத்தை உணவிற்குக் கொடுக்கும். இது மென்மையான அமைப்பையும் உணவிற்குக் கொடுக்கிறது.
மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்கள் அவற்றின் அத்தியாவசிய எண்ணெய்களை வெளியிடுகின்றன மற்றும் கறியின் சுவையை ஆழமாக்குகின்றன. மசாலாப் பொருட்களையும் மூலிகைகளையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம், சுவையான உணவையும் இனிமையான அனுபவத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
