இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக பிரிட்ஜில் வைச்சுராதீங்க... இல்லனா ரெண்டுமே கெட்டுப்போயிரும்...!

பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக நாம் அதிகளவுகாய்கறிகள் மற்றும் பழங்களை அடிக்கடி வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் சேமிக்கிறோம்.

பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக நாம் அதிகளவுகாய்கறிகள் மற்றும் பழங்களை அடிக்கடி வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் சேமிக்கிறோம். பெரும்பாலும், நேரமின்மையால் அதிக காய்கறிகளை வாங்கி அவற்றை ஒன்றாகச் சேமித்து வைக்கிறோம். காய்கறி மற்றும் பழங்களை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கும்போது ​​அவை நீண்ட காலத்திற்கு புதியதாக இருக்கும் மற்றும் அழுகாமல் சேமிக்கப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

Tips to Store Fruits and Veggies in Fridge in Tamil

சில பழங்கள் மற்றும் காய்கறிகள் இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் என்பது பலரும் அறியாதது, அவற்றை ஒன்றாக வைத்திருந்தால், நீங்கள் நினைத்ததை விட மற்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் விரைவில் கெட்டுவிடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் பல்வேறு வகையான நொதிகள் மற்றும் இரசாயனங்கள் இருப்பதால், அவை ஒன்றாக வைத்திருந்தால், மற்றவை விரைவாக அழுக ஆரம்பிக்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்த வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியைப் பொறுத்தவரை, அது எத்திலீன் உணர்திறன் கொண்டது. ஆப்பிள், அத்திப்பழம், திராட்சை போன்ற பழங்களுடன் சேர்த்து வைத்திருந்தால், அதன் ஆயுள் 50 சதவீதம் குறையும். இதை ஃப்ரிட்ஜில் வைப்பதன் மூலம், ப்ரோக்கோலி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே புதியதாக இருக்கும்.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகள்

இந்த சீசனில் இலை காய்கறிகள் ஏராளமாக கிடைக்கும். அவற்றுடன் தர்பூசணி, திராட்சை, ஆப்பிள் போன்ற எத்திலீன் உள்ள பழங்களை சேர்த்து வைத்திருந்தால், அவை விரைவில் அழுக ஆரம்பிக்கும்.

சுரைக்காய்

சுரைக்காய்

வெயில் காலம் வந்தவுடன் சுரைக்காய் அதிகமாக கிடைக்க ஆரம்பிக்கிறது. ஆப்பிள், திராட்சை, அத்திப்பழம், பேரிக்காய் போன்ற பழங்களைக் கொண்ட கூடையில் வைக்கக் கூடாது. இவற்றை ஒன்றாக சேர்த்து வைத்தால், சுரைக்காய் சீக்கிரம் கெட்டுவிடும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் புதியதாக இருக்க காற்று தேவை. எனவே ஆப்பிள், முலாம்பழம், கிவி போன்ற எத்திலீன் உற்பத்தி செய்யும் பழங்களுடன் அதை ஒருபோதும் வைக்க வேண்டாம்.

தக்காளி

தக்காளி

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை ஒருபோதும் ஒன்றாகச் சேமிக்கக்கூடாது. ஏனெனில் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று பழுக்க வைக்கும் செயல்முறையை பாதிக்கும். வெள்ளரிக்காய்கள் ஈரப்பதத்தை வெளியிடுகின்றன, இதனால் தக்காளி வேகமாக கெட்டுவிடும். தக்காளி எப்போதும் அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். அதேசமயம் வெள்ளரிக்காய் குளிர்சாதன பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பையில் சேமிக்கப்பட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, March 13, 2023, 19:45 [IST]
Desktop Bottom Promotion