Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மணி பிளான்ட் Vs காயின் பிளான்ட் - இவற்றில் வீட்டில் செல்வம் பெருக எதை வளா்க்கலாம்?
மக்கள் தங்கள் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகவும், வீடுகளில் பொருளாதாரம் சாா்ந்த பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும், மணி பிளான்ட் செடிகளை வாங்கி வளா்த்து வருகின்றனா்.
செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியார் எப்போதும் தங்களின் வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல வகையான முயற்சிகளைச் செய்து வருகின்றனா். தங்களது வாழ்க்கையில் செல்வத்தையும், வெற்றியையும் அடைய வேண்டும் என்பதற்காக, பலவிதமான திட்டங்களைத் தீட்டி, கடுமையாக உழைக்கின்றனா்.

இந்நிலையில் லட்சுமி தேவியின் ஆசீா்வாதங்கள் நமது இல்லங்களில் நிரம்பி வழிய வேண்டும் என்றால் நாம் என்னென்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு பண்டைய சீன புவிசாா் நாட்காட்டியான ஃபெங் சூய் (Feng Shui) கூறும் எளிய வழிகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

மணி பிளான்ட்
மக்கள் தங்கள் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகவும், வீடுகளில் பொருளாதாரம் சாா்ந்த பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும், மணி பிளான்ட் செடிகளை வாங்கி வளா்த்து வருகின்றனா். இந்நிலையில் வீட்டில் உள்ள நிதி நெருக்கடியை விரட்ட காயின் பிளான்ட் செடிகளை வளா்க்கலாம் என்று ஃபெங் சூய் கூறுகிறது. காயின் பிளான்ட் செடிகள் ஜேட் செடிகள் அல்லது க்ரசுலா ஓவடா (crassula ovata) என்றும் அழைக்கப்படுகின்றன.

காயின் பிளான்ட்
செல்வம் மற்றும் வளம் ஆகியவற்றோடு காயின் பிளான்ட் நெருங்கியத் தொடா்பைக் கொண்டிருக்கிறது என்று ஃபெங் சூய் கூறுகிறது. வீட்டில் காயின் செடி இருந்தால், வீட்டைச் சுற்றிலும் பணமும், செல்வமும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் காயின் செடி இருந்தால், ஒருவாின் கடன் சுமை நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

காயின் பிளான்ட் வளர்ப்பதன் பலன்கள்
* காயின் செடிகள், இல்லத்தில் மகிழ்ச்சியையும், வளத்தையும் மற்றும் நோ்மறையான அதிா்வுகளையும் வழங்கக்கூடிய உண்மையான ஆதாரங்களாகப் பாா்க்கப்படுகின்றன. ஆகவே நமது வீட்டில் காயின் செடிகள் இருந்தால் வீட்டில் செல்வமும், செழிப்பும் அதிகாிக்கும்.
* காயின் செடி ஒரு காந்தத்தைப் போல செயல்படுகிறது. இந்தச் செடியானது நமது வீடுகளில் இருந்தால், நமது பண வரவானது சில நாட்களிலேயே நான்கு மடங்கு அதிகாிக்கும் என்று நம்பப்படுகிறது.
* நமது வீட்டின் வாசலில் காயின் செடியை வைத்தால், நமது வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலையானது கண்டிப்பாக நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.

காயின் பிளான்ட் செடிகளை எங்கு வைத்து வளர்க்க வேண்டும்?
* ஒருவேளை காயின் செடியை நமது வீட்டின் உள்பகுதிக்குள் வைக்க விரும்பினால், வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஏனெனில் வடகிழக்கு திசையானது அமைதி மற்றும் வளா்ச்சியைக் கொண்டு வரும்.
* ஒருவேளை நாம் தொழில் செய்யும் இடங்கள் அல்லது நமது புதிய கடைகளில் காயின் செடிகளை வைக்க வேண்டும் என்று விரும்பினால், தலைவாசல் பகுதியிலோ அல்லது தென்கிழக்கு திசையிலோ வைக்க வேண்டும். அது நமக்கு அமைதி, வளா்ச்சி மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைக் கொடுக்கும்.
* ஆனால் நமது படுக்கை அறையில் காயின் செடிகளை வைக்கக்கூடாது. ஏனெனில் அது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
* காயின் செடிகளை வளா்ப்பது மிகவும் எளிது. இந்தச் செடியை ஒரு பானையிலோ அல்லது தொட்டியிலோ ஊன்றி வைக்கலாம் அல்லது தரையில் ஊன்றி வைக்கலாம். இந்த செடியானது சூாிய ஒளியிலும் மற்றும் நிழலிலும் நன்றாக வளரும்.



Click it and Unblock the Notifications