Latest Updates
-
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்..
சோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா?
ஆயுர்வேத நிபுணரான டாக்டர் அசுதோஷ் கவுதம், சோளம் சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும் என கூறுகிறார்.
சோளம் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். இத்தகைய சோளத்தை பலவாறு நாம் சாப்பிடுவோம். அதில் சிலர் வேக வைத்து சாப்பிடுவர். இன்னும் சிலர் நெருப்பில் சுட்டு எலுமிச்சை மற்றும் மிளகாய் தூள், உப்பு தேய்த்து சாப்பிடுவர். இது அற்புமான சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

இருப்பினும், இந்த ஆரோக்கியமான உணவுப் பொருளால் ஒரு பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. அதுவும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், பெரும் அவஸ்தைப்பட நேரிடும். ஆயுர்வேத நிபுணரான டாக்டர் அசுதோஷ் கவுதம், சோளம் சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், அது பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும் என கூறுகிறார்.

தண்ணீர் குடித்தால் ஏன் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுகிறது?
சோளம் சாப்பிடும் பலரும், அதை சாப்பிட்ட பின் நீர் பருகுவதால் வாய்வுத் தொல்லை மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திப்பதாக கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், சோளத்தை சாப்பிட்ட பின் நீரைப் பருகுவதால், அது செரிமான செயல்பாட்டை பெரும் இடையூறை ஏற்படுத்துமாம். சோளத்தில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் உள்ளது மற்றும் உடனே நீரைக் குடித்தால், வயிற்றில் வாய்வு உற்பத்தி அதிகமாகி, அதன் விளைவாக வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.
ஆகவே சோளம் சாப்பிட்டு உங்களுக்கு வயிறு வலிக்கிறது என்றால், அதற்கு காரணம் சோளம் அல்ல. நீங்கள் குடித்த நீர் தான்.

எவ்வளவு இடைவெளி தேவை?
சோளம் சாப்பிட்டு எவ்வித வயிற்று பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோளம் சாப்பிட்டு குறைந்தது 45 நிமிடம் இடைவெளி விட வேண்டியது அவசியம் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.

சோளத்தை எவ்வாறு சாப்பிடுவது சிறந்தது?
சோளத்தை எப்படி சாப்பிடுவது நல்லது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இத்தகைய கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம். பொதுவாக சோளத்தை நெருப்பில் வாட்டி, எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிளகாய் தூள் மற்றும் உப்பு கலவையில் தொட்டு, சோளத்தின் மீது தடவி சாப்பிடுவதே சிறந்தது.

சோளத்தை ஏன் எலுமிச்சை சேர்த்து உண்ண வேண்டும்?
சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்பதனால், செரிமான செயல்பாடு தங்கு தடையின்றி சிறப்பாகவும், மென்மையாகவும் நடைபெறும். பொதுவாக மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருக்கும். ஆகவே சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்ணும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகி, நோய்களின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.

பிரஷ்ஷாக சாப்பிடுவதே சிறந்தது
சோளத்தை எப்போது வாங்கினாலும், உடனே அதை சமைத்து சாப்பிட வேண்டும். சோளத்தின் முழுமையான சத்துக்களையும் பெற வேண்டுமானால், அதை நற்பதமாக இருக்கும் போதே சாப்பிடுவதே நல்லது. அதை விட்டு, பல மணிநேரங்களாக வைத்து, பின் சாப்பிட்டால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.



Click it and Unblock the Notifications











